திருப்பூர், பிப். 25 – கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித் தடத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் களை கொரோனா பொது முடக்கத்துக்கு முன்பு இயக்கப்பட்ட அதே கால அட்டவ ணைப்படி தற்போது மீண்டும் இயக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் கோரிக்கை விடுத்திருக்கிறார். சேலத்தில் வியாழக்கிழமை, ரயில்வே கோட்ட மேலாளர் சீனிவாசனிடம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட் டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் கோரிக்கை மனு வழங்கி னார். கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன், திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்ட இந்த மனுவில் கூறியிருப்பதாவது: பாலக்காடு - திருச்சி, திருச்சி - பாலக்காடு, கோவை – நாகர்கோயில், நாகர்கோயில் – கோவை, கோவை – சேலம், சேலம் – கோவை ஆகிய மூன்று பயணிகள் ரயில்கள் கொரோனா பொது முடக்கக் காலத்தில் நிறுத் தப்பட்டன. பொது முடக்கம் நீக்கப்பட்டு நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு சேலம் – கோவை, கோவை – சேலம் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. எனினும் ஏதேனும் காரணங் கள் சொல்லி கடந்த ஐந்து மாத காலமாக இந்த ரயில் முழுமையாக இயக்கப்படாமல் நிறுத் தப்பட்டு விட்டது. இந்த ரயிலை மீண்டும் முழு மையாக இயக்க வேண்டும். அதேசமயம் பாலக்காடு – ஈரோடு, ஈரோடு – பாலக்காடு மற்றும் கோவை – நாகர்கோவில், நாகர்கோவில் – கோவை ஆகிய இரண்டு பய ணிகள் ரயிலும், விரைவு ரயிலாக பெயர் மாற் றப்பட்டு, ஏற்கெனவே அந்த ரயில்கள் நிறுத் தப்பட்டு வந்த பல புறநகர் ரயில் நிலையங் களில் தற்போது நிறுத்தப்படாமல் இயக்கப் படுகிறது. அத்துடன் மேற்படி இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வந்த கால அட்டவணையும் மாற்றப்பட்டு உள்ளது.
கொரோனா காலத்துக்கு முன்பு மேற்படி மூன்று ரயில்களும் இயக்கப்பட்ட கால அட்ட வணை கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் மற்றும் இந்த வழித்தடத்தில் உள்ள புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பு பயணிகளுக்கும் வசதியாக இருந்தது. குறிப் பாக கல்லூரி, அலுவலகம், தொழில் சார்ந்த பணிகளுக்கு செல்லக்கூடிய மாணவ, மாண விகள், வங்கி, அரசு ஊழியர்கள், தனியார் நிறு வனப் பணியாளர்கள், தொழிலாளர்கள் உள் ளிட்ட ஆயிரக்கணக்கான பயணிகள் காலை, மாலை வந்து, செல்வதற்கு ஏற்ற நேரத்தில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது விரைவு ரயில்களாக, நேரம் மாற்றப்பட்டு, நிறுத்தங்கள் குறைக் கப்பட்டதால், ஏற்கெனவே பயணித்த ஆயிரக் கணக்கான பயணிகள் இந்த ரயில்களில் தற் போது பயணம் செய்ய முடியாமல் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே அந்த ரயில்களை மீண் டும் ஏற்கெனவே கொரோனாவுக்கு முன்பு இயக்கப்பட்ட அதே நேரத்தில், இயக்குவதை உறுதி செய்ய வேண்டும்.
புதிய இண்டர் சிட்டி ரயில்
கோவை முதல் மதுரை வரை திருப்பூர், ஈரோடு வழியாக புதிய இண்டர் சிட்டி எக்ஸ் பிரஸ் ரயில் இயக்க வேண்டும். கோவை - நாகர்கோயில் இரவு நேர விரைவு ரயிலில், தூத்துக்குடி இணைப்பு ரயில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த சேவை நிறத்தப்பட்டு விட்டது. எனவே மீண் டும் இந்த இணைப்பு ரயிலை இயக்க வேண் டும். திருப்பூர் ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். குறிப்பாக இந்த நிலை யத்தின் வடக்கு, தெற்கு இருபுறமும் போதிய கழிப்பிட வசதி, பயணிகள் தங்குமிடம் வச தியை அதிகரிக்க வேண்டும். கோவை - ராமேஸ்வரத்திற்கு தற்போது திருப்பூர், ஈரோடு வழித்தடத்தில் வாராந்திர ரயிலாக இயக்கப்படுவதை தினசரி ரயிலாக மாற்றி இயக்க வேண்டும். பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரின் தேவைக்கு ஏற்ப இங் குள்ள ரயில் நிலையத்தில் உரிய வசதிகளை பயணிகளுக்கு முழுமையாகச் செய்து தர வேண்டும். இவ்வாறு செ.முத்துக்கண்ணன் அளித்த மனுவில் கேட்டுக் கொண்டிருக் கிறார்.