நாமக்கல்,பிப். 20- சேவை குறைபாடு உள்ளிட்ட கார ணங்களுக்காக வெவ்வெறு வழக்கு களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷ னுக்கு இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே பன்னீர்குத்தி பாளை யம் பகுதியை சேர்ந்த வெள்ளையன் மகன் செல்வமணி. இவர் இண்டேன் கேஸ் சிலிண்டர் இணைப்பை திருச் செங்கோட்டில் உள்ள வீனஸ் இன் டேன் கேஸ் எண்டர்பிரைசஸ் நிறுவ னத்தில் பெற்றுள்ளார். கடந்த 2019 ஜூலை மாதம் இவரது மனைவி செல்வி சமையல் செய்து கொண்டிருந்தபோது கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற் பட்ட சேதம் ரூ.6 லட்சத்தை தரு மாறு உள்ளூர் சிலிண்டர் விநியோகஸ் தரிடமும் இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் நிறுவனத்திலும் விண்ணப்பம் செய்துள்ளார். அவர்கள் எவ்வித இழப் பீட்டையும் தராததால் செல்வமணி கடந்து 2019 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். தற் பொழுது இந்த விசாரணை முடி வடைந்த நிலையில் திங்களன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்ற நீதிபதி வீ.ராமராஜ் மற்றும் உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகி யோர் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட் டுள்ளதாவது, வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் சிலிண்டரில் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்தால் சேதத்தொகையை வழங்கு வதற்காக இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் நிறுவனம் ஐசிஐசிஐ லம்போர்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விபத்து நடந்த மறுநாளே சம்பவ இடத்தை எண்ணெய் நிறுவனத்தின் அலுவ லர்களும், உள்ளூர் விநியோகஸ் தரின் அலுவலர்களும் ஆய்வு செய்துள் ளார்கள். மேலும் வழக்கு தாக்கல் செய்தவர் இழப்பீடு கேட்டு விண்ணப் பித்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எண்ணெய் நிறுவனமும் விநி யோகஸ்தரும் இன்சூரன்ஸ் நிறுவ னத்தில் உடனடியாக இன்சூரன்ஸ் தொகையை வாடிக்கையாளருக்கு பெற்று தரவில்லை. வாடிக்கையாளர் வழக்கு தாக்கல் செய்த பின்னர் விபத்து நடந்ததிலிருந்து 30 மாதங்கள் கழித்து இன்சூரன்ஸ் தொகை ரூபாய் இரண்டு லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங் கியுள்ளது. இன்சூரன்ஸ் தொகையை வழங்க 30 மாதம் காலதாமதம் செய்தது சேவை குறைபாடு என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேவை குறைபாட்டால் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு உள்ளூர் சிலிண்டர் விநியோகஸ்தர்,
எண்ணெய் நிறுவ னம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகிய ஒவ்வொருவரும் இழப்பீடா கவும் செலவு தொகையாகவும் ரூ.2 லட்சத்து 50ஆயிரத்தையும் 30 மாதத் திற்கு ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டி யுடன் நான்கு வாரங்களுக்குள் பாதிக் கப்பட்டவருக்கு வழங்க மாவட்ட நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விழாக்கால கொண்டாட்டம் என்ற பெயரில் குலுக் கல் சீட்டை நடத்தி வணிக லாபம் அடைந்தது நேர்மையற்ற செயல் என்று மூன்று வழக்குகளில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. கடந்த 2022 அக் மாதத்தில் இந்தி யன் ஆயில் கார்ப்பரேஷன் விநியோ கஸ்தரான திருச்செங்கோடு சாலை யில் உள்ள கூட்டுறவு சங்கம் நடத்தும் பெட்ரோல் பங்கில் நாமக்கல்லை சேர்ந்த சுப்புராயன், சுப்ரமணி ஆகி யோர் பெட்ரோல் போட சென்றுள் ளனர். இவர்களுக்கு ரூ.200-க்கு மேல் பெட்ரோல் வாங்கினால் பரிசு கூப்பன் ஒன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெட் ரோல் பங்க் ஊழியர் கூறியபடி ரூ.200-க்கு மேல் பெட்ரோல் வாங்கி பரிசு கூப்பன் பெற்றுள்ளார்கள். கூப்பன்களை வாங்கிய பின்னர் பரிசு குலுக்கல் முறையில் வழங்கப்ப டுகிறது என்பது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இத்தகைய செயல் நேர்மையற்ற வணிக நடைமுறை என்று மூன்று வழக்குகளை நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன் றத்தில் அவர்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கிலும் ரூ.3 ஆயிரம் இழப்பீடாக வும் செலவு தொகையாகவும் நான்கு வாரங்களுக்குள் வழங்க எண்ணெய் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித் துள்ளது.