விவசாயி கொலை வழக்கில் தம்பதியினருக்கு ஆயுள் தண்டனை
சேலம், ஜூலை 22- கெங்கவல்லி அருகே விவசாயியை கொலை செய்த வழக் கில் கணவன் – மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, நடுவனூரை அடுத்த சின்னம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரப் பன். இவரது மனைவி சரோஜா. இவர்களது பக்கத்து நிலத் தைச் சேர்ந்தவர் கந்தசாமி. மாரப்பன் வெகுநட்களாக அர சுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து விவ சாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாரப்ப னுக்கும் கந்தசாமிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள் ளது. இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி யன்று கந்தசாமியை, மாரப்பன் மற்றும் அவரது மனைவி சரோஜா ஆகிய இருவரும் சேர்ந்து அடித்து கொலை செய்த னர். இச்சம்பவம் குறித்து கெங்கவல்லி காவல் துறையி னர் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், விவசா யியை கொலை செய்த கணவன், மனைவி ஆகிய இருவ ருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளியன்று தீர்ப்பளித்தார். மேலும், அபரா தத்தொகையை கட்ட தவறினால், மேலும் ஒரு வருட சிறை தட்டணை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட் டார்.
சித்திரைச்சாவடி தடுப்பணையில் குளிக்க தடை
கோவை, ஜூலை 22- சித்திரைச்சாவடி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க வும், துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வரு கிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. தற்போது மழை ஓய்ந்த நிலையில், சித்திரைச் சாவடி தடுப்பணையில் குளிக்க உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். இதற்கி டையே கோவை குற்றாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் செல்வதை தவிர்த்து விட்டு மக்கள், சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு அதிகளவில் வந்த வண்ணம் இருந்தனர். சித்திரைச்சாவடி தடுப்பணை தூர் வாரப்பட்டதால், அதிக ஆழம் ஏற்பட்டுள்ளது. இதனை தெரி யாமல் குளிக்க வருபவர்கள் அணையில் குதித்து குளித்து வந்தனர். இதனால் தொண்டாமுத்தூர் காவல் துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் குளித்து வந்தனர். எனவே, தொண்டாமுத்தூர் காவல் துறையினரின் அறிவு றுத்தல்படி, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சித்திரைச் சாவடி தடுப்பணைக்கு செல்லும் வழியில் இரும்பு கேட் அமைத்து பூட்டு போடப்பட்டு தடை விதித்துள்ளது.
விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
ஈரோடு, ஜூலை 22- ஈரோடு, காகம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (48). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலை யில், இவர் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத் தில் கருந்தேவன்பாளையம் பகுதி அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த மூதாட்டி மீது மோதினார். இதில், சந்தி ரசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மூதாட்டி ஈரோடு அரசு மருத் துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைக்கப்பட் டார்.
செங்கல் சூளையில் குழந்தை தொழிலாளி மீட்பு
திருப்பூர், ஜூலை 22 - தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) இரா. மலர்க்கொடி வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்தியறிக் கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பான சிறப்புக் கூட்டு ஆய்வு மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அதன்படி வியாழக்கிழமை திருப்பூர் மாவட்டத் தடுப்புப் படையினர், வருவாய் துறையினர், தொழி லாளர் துறை அலுவலர்கள், தொழிற்சாலை ஆய்வாளர் மற் றும் காவல் துறையினருடன், சைல்டு லைன் உறுப்பினர்கள் தாராபுரம் அருகே கூட்டாக ஆய்வு செய்தபோது 11 வயது சிறுவன் செங்கல் சூளையில் பணிபுரிவது கண்டுபிடிக் கப்பட்டு மீட்கப்பட்டார். இவரை குழந்தை தொழிலாளியாக பணியமர்த்திய செங்கல் சூளை உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிவாரணம் வழங்க நடவடிக்கை
திருப்பூர் தெற்கு வட்டம், கண்டியன் கோவில் ஊராட்சி முதியா நெரிச்சல் பகுதியில் கரும்பு வெட்டும் பணியில் கொத் தடிமைகளாக ஈடுபடுத்தப்பட்டிருந்த ஏழு பேர் மீட்கப்பட்ட னர். இவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம், மரக் காணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மீட்கப்பட்ட கொத்த டிமைத் தொழிலாளர்கள் அவர்களது சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை தொழிலாளர் ஆணை யர் ஆணைப்படி அந்த தொழிலாளர்கள் ஏழு பேருக்கு உட னடி நிவாரணத் தொகையாக ரூ.30 ஆயிரம் வீதம் அவர்களது வங்கிக் கணக்கில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்டவர்கள் மீது காவல் துறையில் புகார் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருப்பூர், ஜூலை 22 - திருப்பூர் மாநகராட்சி உள்ளடக்கிய மாவட்டம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) அன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றது. திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 12 வயது முதல் 14 வயது வரை, 15 வயது முதல் 18 வயது வரை உள்ள இளம் சிறார்கள், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவ ருக்கும் ஜூலை 24 சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள் ளது. 1 லட்சத்து 29 ஆயிரத்து 261 பேருக்கு முதல் தவணையும், 3 லட்சத்து 24 ஆயிரத்து 35 பேருக்கு 2ஆம் தவணை தடுப்பூசி யும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி 26 வாரம் ஆன சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த முகாமில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்ப டும். மாநகராட்சி பகுதியில் 190 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெறும். அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங் கள், பள்ளிக்கூடங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையங் கள் ஆகிய இடங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப் படுகிறது. இதற்காக 1140 பேர் பணியாற்ற உள்ளனர். பொது மக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ் வாறு தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்ட சுகாதார பிரிவு மருத்துவ அலுவலர் கூறும்போது, “திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, அருகில் உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
மின்வாரிய அதிகாரி வீட்டில் திருட்டு
தாராபுரம், ஜூலை - 22 தாராபுரத்தில் மின்வாரிய அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெள்ளிப் பொருள்களை சிலர் கொள்ளையடித்து சென்றனர். தாராபுரம் நாமகிரி மின் நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தின மணி (55). இவர் ஊட்டி எமரால்டு பகுதியில் உள்ள மின்வாரி யத்தில் மாவட்ட உதவி கணக்காளராக பணியாற்றி வருகி றார். கடந்த 11 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோருடன் ஊட்டிக்கு வேலை நிமிர் த்தமாக காரில் சென்று விட்டார். இந்நிலையில் ரத்தினசாமி வீட்டில் காலை நேரம் லைட் எரிந்துள்ளது. இதைபார்த்த எதிர் வீட்டில் வசிக்கும் செல்வி என்ற பெண் ரத்தினசாமியின் நண்பர் சரவணன் என்பவர் மூலம் ரத்தினமணிக்கு தொலைபே சியின் மூலம் தகவல் கொடுத்தார். தகவலையடுத்து ரத்தி னமணி குடும்பத்துடன் ஊட்டியில் இருந்து இரவு தாராபு ரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தாராபுரம் காவல்துறையில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அப் போது பீரோவில் வைத்திருந்த பணம் ரூ. 30,000 மற்றும் 600 கிராம் வெள்ளி பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின்வா ரிய அதிகாரி வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் களை தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்ற சிறுவன் கைது
கஞ்சா விற்ற சிறுவன் கைது அவிநாசி, ஜூலை 22- சேவூர் அருகே கருமாபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த சிறுவனை காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். சேவூர் அருகே கருமாபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து, காவலர்கள் சம்பவ இ டத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்க இடமாக காவலர்களை பாரத்ததும் தப்பியோட முயன்ற சிறுவனை போலிஸார் பிடித்து விசா ரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் 700 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதை யடுத்து சேவூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அவிநாசியில் ரூ.55. 67 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அவிநாசி, ஜூலை 22- அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, மொத்தம் 2095 பருத்தி மூட் டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச் ரகப்பருத்தி குவிண் டால் ஒன்றுக்கு ரூ.8,000 முதல் ரூ.9,159 வரையிலும், கொட்டு ரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,000 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.55 லட்சத்து 67 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற் றது.
தூய்மை பணியாளர் வருகை பதிவேட்டில் நான்கு முறை கையெழுத்திட வேண்டுமா?
திருப்பூர், ஜூலை 22 - திருப்பூர் மாநகராட்சியில் தூய் மைப் பணியாளர்கள் வருகைப் பதி வேட்டில் ஒவ்வொரு நாளும் நான்கு முறை கையெழுத்திட வேண்டும் என்ற அறிவிப்பைக் கைவிட வேண்டும் என்று தூய்மைப் பணியாளர் சங்கம் கோரியுள்ளது. தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலவாரியக் குழு உறுப்பினர் செல்வக் குமார் தலைமையில், திருப்பூர் மாநக ராட்சி டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி- எஸ்.டி அலுவலர் மற்றும் அடிப்படை பணியா ளர் சங்கம் சார்பில், திருப்பூர் மாநக ராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடியி டம் வெள்ளியன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சியில் நிரந்தர துப்புரவுத் தொழிலாளர்கள் 700 பேரும், ஒப்பந்த தொழிலாளர்கள் 1500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். சமூக, பொருளாதார ரீதியில் பின் தங்கிய பட்டியல் இன மக்கள் தான் இப்பணியை செய்கின்றனர். நாள்தோறும் காலை 6 மணிக்கு பணியை தொடங்குவதால், குழந்தை களை சரிவர படிக்க வைக்க முடிய வில்லை. இதில் ஒரு சில தூய்மைப் பணி யாளர்கள் உரிய நேரத்தில் பணி செய் யாமல் இருப்பதை காரணங் காட்டி, தற்போது வருகை பதிவேட்டில் ஒருநா ளைக்கு 4 முறை வெவ்வேறு நேரங்க ளில் கையெழுத்திட வேண்டும் என உத் தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகி றது. இந்த பணியாளர்கள் பல்வேறு பகு திகளில் இருந்து பணிக்கு வருகிறார் கள். தூய்மைப் பணியும் தொடர்ந்து தொய்வின்றி செய்கின்றனர். இதனால் அவர்களின் உடல் நலம் பாதிக்கப்ப டுகிறது. காலை 6 மணி பணிக்கு, அதற்கு முன்பாகவே தயாராக வேண்டிய நெருக்கடி பெண்களுக்கு ஏற்பட்டுள் ளது. அவர்கள் அதற்குள் வீட்டு சமை யல் வேலைகள் உட்பட அனைத்தையும் முடித்துவிட்டு தான் வர வேண்டி உள் ளது. இந்நிலையில், அவர்களின் நிலை கருதி கருணை அடிப்படையில் அவர்க ளுக்கு பழைய முறையிலேயே இரு முறை மட்டும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட மாநகராட்சி ஆணை யர் பரிந்துரை செய்ய வேண்டும். முறை யாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
பரமசிவம்பாளையம் குட்டையில் வண்டல் மண் எடுக்க அனுமதி
திருப்பூர், ஜூலை 22- பொங்குபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பரமசிவம்பா ளையம் குட்டையில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வா கம் அனுமதி வழங்கியுள்ளது. இது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நான்காண்டு காலமாக மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எஸ்.அப்புசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடந்த நான்கு ஆண்டுகளில் 22 முறைக்கு மேல் மனுக் கொடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி இந்த குட்டையைத் தூர்வார ரூ.9.56 லட்சம் ஆகும் என மதிப்பிட்டு, மழைநீர் வடிந்த பிறகு குட்டையைத் தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரித்தனர்.மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குட்டையில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வரி வசூலர் பணி வழங்க கோரிக்கை
திருப்பூர் ஜூலை 22- திருப்பூர் மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் கருப்பன், தியாகராஜன், சரவணன், ஹரிஹரசுதன் மற்றும் ராஜேஸ்வரன் ஆகியோர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடியிடம் அளித்த மனுவில், நாங்கள் 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றும், 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்களாகவும், காவலர்களாகவும் பணிபுரிந்து வருகிறோம். திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளில் வரி வசூலர்கள் குறைவாக இருப்பதாலும், ஏற்கனவே ஒரு வரி வசூலர் 2 வார்டுகள் வரை பணி செய்வதால், கல்வித்தகுதி அடிப்படையில் எங்களுக்கு வரி வசூலர் பணி வழங்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டுள்ள னர்.
குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
திருப்பூர், ஜூலை 22 - திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டி தேர்வுக்கான இல வசப் பயிற்சி வகுப்பு ஜூலை 25 அன்று தொடங்கப்படு கிறது. இவ்வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயரை 9499055944 அல்லது 0421-2999152 என்ற அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் எஸ்.வினீத் தெரி வித்துள்ளார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:28.72/60அடி நீர்வரத்து:27கன அடி
வெளியேற்றம்:27கன அடி
அமராவதி அணை நீர்மட்டம்: 88.52/90 அடி.நீர்வரத்து:1510 கன அடி
வெளியேற்றம்:1541கனஅடி
மழையளவு: 2 மிமீ
ஊரக உள்ளாட்சி நிர்வாகம் சான்றிதழ் படிப்புக்கு அழைப்பு
ஈரோடு, ஜூலை 22- தமிழக அரசு வழிகாட்டுதல்படி, மாநில ஊரக வளர்ச்சி மற் றும் ஊராட்சி நிறுவனம் மூலம் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய விவரங்கள், ஊராட்சி நிர்வாகம், நிதி மேலாண்மை, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து, ஊரக உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் என்ற மூன்று மாதச்சான்றிதழ் படிப்பு நடத்த உள்ளது. இச்சான்றிதழ் படிப் பில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தனி நபர்கள், அனைத்து கிராம ஊராட்சி செயலர்கள், அரசு அலுவலர்கள், பணியா ளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட அளவிலான பயிற்றுநர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஈரோடு மாவட்ட DRCP பயிற்றுநர் மூல மாக இணைய வழியில் ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தி விண்ணப்பத்தினை ஈரோடு உதவி இயக்குநர் (ஊராட்சி கள்) அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வள மைய அலு வலரை 6369467746-என்ற தொலைபேசிஎண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.
தொழிலாளி தற்கொலை
ஈரோடு, ஜூலை 22- ஈரோடு, கஸ்பா பேட் டையை சேர்ந்தவர் பழனி சாமி (60). கட்டிட வேலை பார்த்து வந்த பழனிசாமி, கை, கால், இடுப்பு வலி போன்ற உடல் உபாதைக ளால் கடந்த 3 வருடங்களாக வேலைக்கு செல்லவில்லை. மேலும், தனது மகளுக்கு திருமணமாகவில்லை என மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், பழனிசாமி எலி மருந்தை மதுபானத்தில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகி றது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
கோவை, ஜூலை 22- கோவையில் கஞ்சா விற் பனையில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிட்டாம்பாளையம் பகுதி யில் போலிசார் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வர்களை தடுத்து நிறுத்தி போலிசார் சோதனை நடத்தி னர். அதில், வாகராயம்பா ளையம் பகுதியைச் சேர்ந்த தீபக் குமார் (20), சந்தோஷ் (24) மற்றும் சதீஷ்குமார் (32) ஆகிய 3 நபர்கள் விற் பனைக்காக கஞ்சாவை எடுத் துச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரை யும் போலிசார் கைது செய்த னர். மேலும், அவர்களிடமி ருந்து சுமார் 2.300 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங் களையும் பறிமுதல் செய்த னர்.
காட்டேரி பூங்காவிற்கு பிபின் ராவத் பெயர்
உதகை, ஜூலை. 22- குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத் தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் பெயரை காட்டேரி பூங்காவிற்கு சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதியன்று ராணுவ ஹெலி காப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத் தில் முப்படைத்தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தின் அருகே காட்டேரி பூங்கா உள்ளது. இந்நிலையில், இந்த பூங்காவுக்கு பிபின் ராவத்தின் பெயர் சூட்ட வேண்டும் என்று வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணைத்தலைவர் வினோத்குமார் பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். தற்போது இந்த கடிதமானது தோட்டக்கலை இணை இயக்குனருக்கு பரிசீலனைக்காக வந்துள்ள தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தோட்டக்கலை இணை இயக் குனர் சிபிலா மேரி கூறுகையில், நீலகிரி மாவட் டத்தில் உள்ள காட்டேரி பூங்கா மற்றும் ரன்னி மேடு ரயில் நிலையத்திற்கு முப்படைத்தள பதி பிபின் ராவத் பெயர் சூட்ட கேட்டிருந் தார். அதன்படி மாநில தோட்டக்கலை கட்டுப் பாட்டில் உள்ள காட்டேரி பூங்காவுக்கு மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் பெயர் சூட்டுவதற்கு மாநில அரசின் முடி வுக்கு கட்டுப்பட்டு, காட்டேரி பூங்காவுக்கு முப் படை தளபதி பிபின் ராவத் பெயர் சூட்ட நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார்.