districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மாணவியை ஆபாச படம் எடுத்த  தம்பதி போக்சோவில் கைது

தருமபுரி, ஜூன் 25- தருமபுரி அருகே மாணவியை மிரட்டி ஆபாச படம் எடுத்த  தம்பதி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்த 15  வயது மாணவி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே  பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (27). இவரது மனைவி  தெய்வானை (20). இவர்கள் அந்த மாணவியிடம் நட்புடன்  பழகி வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெய் வானை அந்த மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் மாணவியை வீட்டிலேயே இருக்கும்படி கூறிவிட்டு கடைக்கு சென்று உள்ளார். அப்போது வீட்டில்  தனியாக இருந்த தமிழ்ச்செல்வன் வீட்டின் கதவை சாத்தி விட்டு மாணவியை ஆடைகளை அவிழ்க்கும்படி மிரட்டி உள்ளார். ஆனால் அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் ஆடைகளை அவிழ்க்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று  மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் பயந்து  போன மாணவி ஆடைகளை அவிழ்த்துள்ளார். இதை யடுத்து, அவர் செல்போனில் மாணவியை ஆபாசமாக படம்  எடுத்து உள்ளார். இது பற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று  மிரட்டி உள்ளார். இந்நிலையில், சில நாட்கள் கழித்து மாணவியிடம் தமிழ்ச்செல்வன், பணம் கொடுக்க வேண்டும்.

இல்லா விட்டால் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து மாணவி, தனது வீட்டில் இருந்து 6 பவுன்  நகைகளை பெற்றோருக்கு தெரியாமல் எடுத்து வந்து தமிழ்ச்செல்வனிடம் கொடுத்துள்ளார். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆடைகள் இல்லாமல் தன்னிடம்  வீடியோ காலில் பேச வேண்டும் என்று மாணவியை மிரட்டி  தமிழ்ச்செல்வன் அவ்வாறு பேச வைத்துள்ளார். இந்நிலையில் மாணவியின் பெற்றோர் ஒரு திருமணத் திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்த நகைகளை சரி  பார்த்தனர். அப்போது நகைகள் குறைந்திருப்பது தெரிய  வந்தது. இதுகுறித்து மாணவி மற்றும் குடும்ப உறுப்பினர் களிடம் விசாரித்துள்ளனர். அப்போது மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற் றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அரூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில்  போலீசார் விசாரணை நடத்தினர்.  இதில், போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன், அவருடைய மனைவி தெய்வானை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.  பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி தமிழ்ச் செல்வனை அரூர் சிறையிலும், தெய்வானையை சேலம் பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு

நாமக்கல், ஜூன் 25- நாமக்கல் மாவட்டத்தில் 4950 பள்ளி சொல்லா குழந்தை கள் கண்டுபிடிப்பட்டுள்ளனர்.  நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், 6 முதல் 12 வயது டைய அனைத்து இடைநின்ற குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், இதுவரை பள்ளியில் சேராத குழந்தை  கள், புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள்  அனைவரையும், பள்ளியில் சேர்க்க அரசுத் துறை அலுவலர் களுக்கு மாவட்ட அளவிலான கூட்டம்  ஆட்சியர் உமா தலை மையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது, பள்ளி செல்லா குழந்தைகளை கண்காணிக்க, பள்ளி அளவி லான குழு, வட்டார அளவிலான குழு மற்றும் மாவட்ட அளவிலான குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 15 ஒன்றியத்திற்கும் கண் காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்  மாவட்டத்தில், 2022–-23ல் மேற்கொள்ளப்பட்ட பள்ளி செல் லா குழந்தைகள் கணக்கெடுப் பில் 4,950 குழந்தைகள் கண்ட றியப்பட்டுள்ளனர். அவர்களில், 2,995 குழந்தைகள் பள்ளியில்  சேர்க்க வேண்டும். பிறதுறை அலுவலர்கள் இடைநின்ற மாண வர்களை பள்ளியில் சேர்க்க, தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும்.  நாமக்கல் ஒன்றியத்தில், வார்டு எண், 37, 38 நரிக் குறவர் காலனி மற்றும் கீரம்பூர் சுரக்காபாளையம், எருமப் பட்டி ஒன்றியத்தில் பொட்டிரெட்டிப்பட்டி, போடிநாயக் கன்பட்டி, சேந்தமங்கலம் ஒன்றியத்தில் சாலையூர், மலை வேப்பன் குட்டை, மல்லசமுத்திரம் ஒன்றியம், நாயக்கர் வளவு, ஜக்கம்மா தெரு, கபிலர் மலை ஒன்றியம் பல்லா  பாளையம் ஆகிய பகுதிகளில், இடைநின்ற மாணவர்கள் அதிகம் உள்ளனர். இந்த பகுதிகளில், தொழிலாளர் நலத் துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, குழந்தைகள் உதவி மையம் மற்றும் போலீசார் இணைந்து களப்பணி மேற்கொண்டு, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் கூறினார்.  நிகழ்ச்சியில் டி.ஆர்.டி.ஏ திட்ட இயக்குநர் சிவக்குமார், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் சுகந்தி, மாவட்ட சமூக நல அலுவலர்  கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கேரளாவுக்கு அரிசி கடத்த முயன்ற  இரு பெண்கள் கைது

திருப்பூர், ஜூன் 25 - திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து கேரளாவுக்கு ரயில்  மூலம் ரேசன் அரிசியை கடத்த முயன்ற கோவையைச் சேர்ந்த இரு பெண்களை உணவுப்பொருள் கடத்தல்  தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிட மிருந்து 400 கிலோ ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப் பட்டது.  உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்  கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவது தொடர்பாக மாவட்ட  எல்லை மற்றும் ரயில் நிலையங்கள் பேருந்து நிலை யங்களில் தொடர் கண்காணிப்பு செய்து வருகின்றனர். அதன்படி, திருப்பூர் ரயில் நிலையத்தில் சனியன்று அவர் கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது கோவையைச் சேர்ந்த அமுதா (40) மற்றும்  ராபியா (45) என்ற இரு பெண்கள் தலா 25 கிலோ வீதம்  கட்டப்பட்ட 16 மூட்டைகளில் 400 கிலோ ரேசன் அரிசி  வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் விலை இல்லா ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி ரயில்  மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, இரு பெண்களையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 400 கிலோ ரேசன் அரிசி யையும் பறிமுதல் செய்தனர்.

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

நாமக்கல், ஜூன் 25- நாமக்கல் நகராட்சி பகுதியிலுள்ள வணிக நிறுவனங்க ளில் பயன்பாட்டிற்கு வைத்திருந்த 72 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாமக்கல் நகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் கடை களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்தப்படுவதோடு, விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்ட னர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுமித்ரா பாய், நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் தலைமையில் தூய்மை ஆய்வாளர் பாஸ்கர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் முரளி, உதவி பொறியா ளர் கார்த்திக் உள்ளிட்டோர் ஆய்வில் நாமக்கல்லில் உள்ள கடைவீதி, பேருந்து நிலையம், திருச்செங்கோடு மற்றும் மோக னூர் சாலையில் உள்ள 85 கடைகளில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 72 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடை உரிமையாளர்க ளுக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இலவச பன்னோக்கு மருத்துவ முகாம்

தருமபுரி, ஜூன் 25- பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி கருணாநிதி நூற்றாண்டு விழாவைவையொட்டி, மாநிலம் முழுவதும் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரூர் அரசு கலைக் கல்லூரி ஆகிய 3 இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பாப்பாரப்பட்டியில் நடை பெற்ற சிறப்பு மருத்துவ முகாமை ஆட்சியர் கி.சாந்தி தொடங்கி வைத்தார். தொடர்ந்து முகாமில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந் தார். இதன்பின் அவர் பேசுகையில், இம்முகாமில் பொது  மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், எலும்பியல் மருத்துவம், கண், காது மூக்கு தொண்டை, பல், மனநலம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், காசநோய், தொழு நோய், கொரோனா பரிசோதனைகள், தோல் சம்பந்த மான நோய்கள் எச்.ஐ.வி. கண்டறியும் சோதனை போன்ற பல் வேறு வகையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகாமில் இருதய நோய் நிபுணர், சிறுநீரகவியல் நிபுணர், நரம்பியல் நிபுணர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை, பெண்களுக்கான மார்பக புற்றுநோய், கர்ப்பபை, வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோ தனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தொடர் சிகிச்சைகள் அளிக்கப்படும், என்றார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, உதவி ஆட்சியர் கீதாராணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் சாந்தி, சுகாதார பணிகள் துணை  இயக்குநர் ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

நாமக்கல், ஜூன் 25- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் வாரச்சந்தை யில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட் டன. பக்ரீத் பண்டிகை ஜூன் 29 ஆம் தேதியன்று கொண்டாடப் பட உள்ளது. இதையொட்டி இஸ்லாமியர்கள் குர்பானி கொடுப்பது வழக்கம். எனவே தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்ட  தொடங்கி உள்ளது. நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் நகராட்சி அலுவலகத்திற்கு பின்னால் வாரச்சந்தை செயல் பட்டு வருகிறது. இதில் நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி சேலம், கரூர், கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஆடுகள் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சனியன்று ஒரே நாளில் மட்டும் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாகவும், கடந்த ஆண்டைவிட குறைவாகவே இந்த ஆண்டு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்த னர். மேலும், வெள்ளாடுகளைவிட செம்மறி ஆடுகள் அதிகள வில் விற்பனையானதாகவும் வியாபாரிகள் கூறினர். வியா பாரிகள் குறைவான அளவே வந்ததால், விற்பனை குறைந்த தாக விவசாயிகள் தெரிவித்தனர்.

போலீசாரின் வாகனங்கள் ஏலம்

உதகை, ஜூன் 25- நீலகிரி மாவட்ட போலீசாரின் வாகனங்கள் ஜூலை 4 ஆம் தேதியன்று ஏலம் விட உள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 12 கனரக மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், 30 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 42 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலையில் ஜூலை 4 ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு நீல கிரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது  ஏலத்தில் விடப்படும். இருசக்கர வாகனங்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன பிரிவிலும், கனரக மற்றும் நான்கு சக்கர வாகனங் கள் அனைத்தும் புதுமந்து ஆயுதப்படை குடியிருப்பு வளா கத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்பு வோர் ஜூலை 3 ஆம் தேதி மாலை 5 மணி வரை இந்த வாக னங்களை பார்வையிட்டு கொள்ளலாம். மேலும், ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 3 ஆம் தேதியன்றே இரு சக்கர வாகனத்திற்கு ரூ.1000 மற்றும் கனரக, நான்கு சக்கர வாக னத்திற்கு ரூ.2 ஆயிரம் முன்பணம் செலுத்தி தங்களது பெயர் களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப் படுவார்கள். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரியாக இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவிகிதம், நான்கு சக்கர வாகனங்க ளுக்கு 18 சதவிகிதம் உட்பட முழு தொகையையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ள லாம். மேலும், விவரங்களுக்கு 7502231971, மற்றும் 9786141247 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

பருத்தி ஏலம்

சேலம், ஜூன் 25- சேலம், கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. விவசா யிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த 3 ஆயி ரம் பருத்தி மூட்டைகள் 500 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் பிடி  ரகப்பருத்தியானது குவிண் டால் ஒன்று ரூ.6,200 முதல் ரூ.7,400 வரை விற்பனையா னது. மொத்தம் ரூ.70 லட்சத் துக்கு வர்த்தகம் நடைபெற் றதாக ஏல அதிகாரிகள் தெரி வித்தனர்.