அவிநாசி, அக்.8- திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வா கத்தின் மெத்தனத்தால், பழுதான குடிநீர் குழாயை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் நகர் மன்ற உறுப்பினர்கள் சீரமைத்தனர். திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், 10ஆவது வார்டில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த வார்டில் தண்ணீர் ஒரு நாள் விட்டு ஒரு நாளும், குடிநீர் வாரத்திற்கு ஒரு முறையும் விநியோகம் செய்யப்படுகிறது. இதனிடையே, குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, பொது மக்கள் 15 நாட்களாக குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். எனவே, குடிநீர் குழாயை சீரமைத்து தருமாறு நகராட்சி நிர்வாகத்திற்கு, நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சுப்பிர மணியம், 22 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் பார்வதியின் கணவர் சிவகுமார் ஆகியோர் குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையறிந்த, நக ராட்சி ஊழியர்களும் இணைந்து குழாய் சீரமைக்கப்பட்டது. குடிநீர் குழாயை சீரமைத்த நகர் மன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.