districts

img

லஞ்சம் கேட்கும் மாமன்ற உறுப்பினர்கள்- தூய்மை பணியாளர்கள் தர்ணா

சேலம், மார்ச் 25- பணியிட மாறுதல் செய்யாம லிருக்க லஞ்சம் கேட்கும் மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் கொண்டலாம்பட்டி மற் றும் அஸ்தம்பட்டி மண்டலத்துக் குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் 40க்கும் மேற்பட்ட தூய்மை பணி யாளர்கள் வெள்ளியன்று, மாநக ராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், சேலம் மாநகராட்சி, கொண்டலாம் பட்டி அஸ்தம்பட்டி மண்டலத்துக் குட்பட்ட 5, 6, 8, 47, 48, 49 ஆகிய  கோட்டங்களில் சுமார் 200க்கும் மேற் பட்ட தூய்மை பணியாளர்கள், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தற் போது வரை தொடர்ந்து பணி யாற்றி வருகின்றோம். நிரந்தர பணி யாளராக பணிபுரிந்து வரும் நிலை யில், நாங்கள் தொடர்ந்து அதே  கோட்டத்தில்  பணிபுரிய வேண்டு மென்றால், ஒவ்வொரு கோட்டத் தின் மாமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் வழங்க வேண்டும். அதா வது, ஒவ்வொரு தூய்மை பணியா ளர்களும் தலா பத்தாயிரம் ரூபாய் அளித்தால் மட்டுமே இடமாறுதல் செய்யாமல் தொடர்ந்து பணி செய்ய முடியும் என்றும், இல்லை யென்றால் பணி செய்ய முடியாது என்றும் கொண்டலாம்பட்டி துப்பு ரவு மேற்பார்வையாளர் மற்றும் ஆய் வாளர் ஆகியோர் மிரட்டி வருகின்ற னர். இதுகுறித்து முன்பு மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து புகார் அளித்திருந்தோம். ஆனால், தற்போது வரை எந்தவித நடவ டிக்கையும் எடுக்கப்படாததால், மாநகராட்சி ஆணையாளர் அலுவ லகத்தில் உள்ள வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தூய்மை பணியாளர்கள் தெரிவித்த னர். இப்போராட்டத்தால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பான சூழல் நில வியது.