districts

img

ரூ 1.32 கோடி வாடகை பாக்கி: 22 கடைகளுக்கு மாநகராட்சி சீல்

திருப்பூர், ஆக. 2 - திருப்பூரில் ரூபாய் 1.32 கோடி வாடகை பாக்கி செலுத்தாத மாநக ராட்சி வணிக வளாக கடைகளுக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர். திருப்பூர் - அவிநாசி சாலை, ஓடக் காடு பகுதியில் திருப்பூர் மாநகராட் சிக்கு சொந்தமான மகாகவி பாரதி யார் நூற்றாண்டு நினைவு வணிக  வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 22 கடைகள் உள்ளன. இந் நிலையில் கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் கடந்த 2021ஆம் ஆண் டிலிருந்து வாடகை செலுத்தாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இத னையடுத்து, திருப்பூர் மாநகராட்சி சார்பில் வாடகை பாக்கியை செலுத் தும் படி கடைக்காரர்களுக்கு அறி வுறுத்தப்பட்டது. இருப்பினும் வாடகை செலுத்தப்படவில்லை. இதனைத்தொடர்ந்து கடந்த வாரம்  மாநகராட்சி சார்பில் கடைக்காரர்கள்  அனைவருக்கும் நோட்டீஸ் அனுப் பப்பட்டது. அதன் பிறகும் கடை உரி மையாளர்கள் வாடகை செலுத்தா மல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து வாடகை செலுத் தாத 22 கடைகளுக்கும் புதனன்று மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி யாக பூட்டி சீல் வைத்தனர். இந்த 22 கடைகளுக்கும் தலா ரூ. 6  லட்சம் வாடகை பாக்கி இருப்பதும்,  ஒட்டுமொத்தமாக ரூ. 1 கோடியே 32  லட்சம் வாடகை பாக்கி இருப்பதாக  மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.