திருப்பூர், ஜன.8- திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதித்த நபர் களுக்கு முதல்கட்ட உடல் பரிசோ தனை செய்வதற்காக 4 இடங்களில் பரி சோதனை மையங்கள் அமைக்கப்பட் டுள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதித்த நபர் களுக்கு முதல்கட்ட உடல் பரிசோ தனை செய்வதற்காக மண்டலம் 1-வேலம்பாளையத்தில் வார்டு 14, சிறுப்பூலவப்பட்டி சமுதாயக்கூடம், மண்டலம் 2-நஞ்சப்பா நகரில் வார்டு 18 ஜெ.ஜெ.நகரில் உள்ள வாவிபா ளையம் சமுதாயக்கூடம், மண்டலம் 3 நல்லூரில் வார்டு 35ல் உள்ள விஜயா புரம் சமுதாயக்கூடம், மண்டலம் 4 ஆண்டிப்பாளையத்தில் வார்டு 52ல் உள்ள பழவஞ்சிப்பாளையம் சமுதா யக்கூடம் ஆகிய இடங்களில் பரிசோ தனை மையங்கள் அமைக்கப்பட் டுள்ளது. தொற்று பாதித்த நபர்களுக்காக சனியன்று முதல் இந்த மையம் தொடங்கப்பட உள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதித்த நபர்க ளுக்கு தொற்றின் தன்மைக்கு ஏற்ப வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளவோ அல்லது கொரோனா பாதுகாப்பு மையங்கள் அல்லது மருத்துவமனை களுக்கு சென்று சிகிச்சை மேற்கொள் ளவோ அறிவுறுத்தப்படும் என்று திருப் பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந் திகுமார் தெரிவித்துள்ளார்.