districts

img

கூட்டுறவு ஊழியர் சங்க அமைப்பு தின விழா

தருமபுரி, ஆக.6- தமிழ்நாடு அரசு ௯ட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் அமைப்பு தின விழா செவ்வாயன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் 1988 ஆம்  ஆண்டில் துவங்கப்பட்டது. அந்த காலத்திலிருந்து தற்போது  வரையில் சமரசம் ஏதும் செய்து கொள்ளாமல், போராட்ட  களத்தில் வீரச்சமர் புரிந்து கோரிக்கைகளை வென்றெடுக் கும் அமைப்பாக கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் உள்ளது.  இந்நிலையில், இச்சங்கத்தின் 36 ஆம் ஆண்டு அமைப்பு தின  விழா செவ்வாயன்று கொண்டாடப்பட்டது. தருமபுரி கூட்டு றவு மண்டல இணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடை பெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் ராமன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாக்கி யதி, மாவட்ட துணைத்தலைவர்கள் நந்தினி, இனியன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை, ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புக ழேந்தி, சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டத் தலை வர் சி.காவேரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக, அமைப்பு தினத்தை முன்னிட்டு, சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கப்பட்டன.