districts

img

“இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கபடவில்லை”

சேலம், ஜன.13- நரசிங்கபுரம் நகராட்சியில் பணிபுரிந்து  வரும் 71 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்க ளுக்கு இரண்டு மாத காலமாக சம்பளம் வழங்காத நிலையில், நகராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள  நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள் ளன. இந்த 18 வார்டுகளுக்கும் ஒப்பந்த தூய் மைப் பணியாளர்களாக 71 பேர் பணியாற்றி வருகின்றனர். மேலும், நகராட்சியில் ஒப்பந் தத்தின் மூலம் சென்னையைச் சேர்ந்த தனியா ருக்கு சொந்தமான ஹெல்த் கேர் டெக்னாலஜி என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறது. இந்த நிறுவனம் நரசிங்க புரம் நகராட்சியில் பணியாற்றும் 71 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு பொங்கல் பண் டிகை நெருங்கிய நிலையிலும், தொடர்ந்து இரண்டு மாத காலமாக சம்பளம் வழங்க வில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக நிலுவையில் உள்ள இரண்டு மாத சம்ப ளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணி யாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தூய்மைப்பணியாளர்கள் கூறுகையில், எங்கள் வாழ்வாதாரமே இந்த ஊதியத்தை நம்பித்தான் உள்ளது. 2 மாதமாக சம்பளம் வழங்காததால் வீட்டு வாடகை, மளிகை சாமான்கள், குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். தற்போது பொங்கல் வருவ தால், எங்களுக்கு நிலுவையில் உள்ள இரண்டு மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் மேலும் பொங்கல் பண் டிகை என்பதால் தொடர்ந்து ஐந்து நாட்க ளுக்கு வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட் டுள்ளதால், தற்போது சம்பளத்தை வங்கி யின் மூலம் வழங்கினால் எங்களால் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ளதால் நகராட்சி ஆணையாளர் எங்களுக்கு முறையாக சம்ப ளம் வழங்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனாலே எங்களுக்கு சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது, என்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த நகராட்சி  ஆணையாளர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். இந்த முற் றுகை போராட்டத்தால் நரசிங்கபுரம் நக ராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதியில் காலை முதலே தூய்மைப் பணிகள் மேற்கொள்ளா மல் குப்பைகள் தேங்கி வருகின்றன. மேலும், தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் தூய் மைப் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள  சம்பளத்தை வழங்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரி வித்தனர்.