பொள்ளாச்சி, ஜூலை. 7- பொள்ளாச்சி அடுத்த வால்பாறை பகுதியில் தொடர் கன மழை காரணமாக மன்சரிவு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரங்களில் தொடர்ந்து ஒரு வார காலமாக கனமழை பெய்து வரு வதால், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. வால் பாறை கால்பந்து மைதானத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. மேலும் தடுப்புச் சுவரின் அருகே அமைந்துள்ள வீடுகள் எந்நேரத்திலும் இடிந்து விழும் அபா யத்தில் உள்ளது. இதன் காரணமாக வீடுகள் சேதம் அடைந்துள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்களை வால்பாறை நகராட்சி நிர்வாகம் மீட்டு பாதுகாப்பான முறையில் உணவு ஏற்பாடு செய்து, மாற்று கட்டிடங்களில் தங்க வைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வால்பாறை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.