districts

img

ரேசன் கடைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றதே

கோவை, மே 23 –  ரேசன் கடைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றிட முயற்சிப்பதை மாநில அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொதுதொழிலா ளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இச்சங்கத்தின் மண்டல பொது குழு கூட்டம் கோவை மாவட்டம், மேட்டுபாளையம் சாலையில் உள்ள எஸ்இடிசி போக்குவரத்து சங்க அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மண்டல தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமை யில் நடைபெற்ற பொதுக்குழுவில் மண்டல செயலாளர் எம்.ஏழு மலை, பொருளாளர் எம்.திருக் குமார், செயற்தலைவர் வி.ஏழு மலை மற்றும் நிர்வாகிகள் என்.ராமன், வி.தேவகுமார் உள் ளிட்ட மண்டல பொதுக்குழு உறுப் பினர்கள் பங்கேற்றனர். பொதுக் குழு கூட்டத்தை வாழ்த்தி சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உரையாற் றினார்.  இதில், ரேசன் கடைகளை தனியார் மயப்படுத்தும் நடவடிக் கைகள் துவங்கியுள்ளது. இத னால், ஊழியர் நலன் பாதிப்ப தோடு, ஊழலுக்கும் வழிவகுக் கும். பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பொருள்கள் கள்ள சந்தைக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளது.

கூட்டுறவுத்துறைக்கு மாற்றும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசின் கட் டுப்பாட்டில் உள்ள நவீன அரிசி ஆலைகளை தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும். இத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். கொள் முதல் பணியாளர்களை நிரந்தி ரம் செய்திட வேண்டும். சுமைப் பணி மற்றும் துப்புரவு தொழி லாளர்களை அவுட்சோர்சிங் முறையில் எடுப்பதை கைவிட்டு நிரந்திர தொழிலாளர்களாக பணி யில் அமர்த்த வேண்டும். குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் எம்.முத்தையா நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் தேர்வு தமிழ்நாடு நுகர் பொருள்  வாணிபக்கழக. பொதுத்தொழிலா ளர் சங்கத்தின் தலைவராக கே.பாலகிருஷ்ணன், செயலாள ராக வி. தேவக்குமார், பொருளா ளராக எம். திருக்குமார், துணை தலைவர்களாக எம். எழிலன், எஸ்.பாபு, எஸ். நாகரஜன், துணை  செயலாளர்களாக பி. மனோகரன், எம். முத்தையா, எம். துரையரசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட் டுள்ளனர்.