உதகை, டிச.30- பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்த வேண்டும். ஒப்பந்த முறையை திணிக்கக்கூடாது. 2015 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த கொள் முதல் பணியாளர்களை கொண்டு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண் டும். அமுதம் ரேசன் கடைகளை கூட்டு றவுத்துறை மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு தாரை வார்க்கக்கூடாது. சுமைப்பணியில் உள்ள ஒப்பந்த முறையை ரத்து செய்துவிட்டு, பணி யாளர்களை நிரந்தரப்படுத்த வேண் டும். சுமைப்பணி தொழிலாளர்க ளுக்கு கூலி உயர்வு வழங்க வேண் டும். நுகர்பொருள் வாணிப கழகத் தால் பரிந்துரைக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைத்த ரூ.4 ஆயிரம் ஓய்வூ திய திட்டத்தை மறுபரிசீலனை செய்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார் பில் மாநிலம்தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டம், உதகை குட்செட் பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மண்டல தலைவர் ரூஸோ வாட்டர் தலைமை வகித்தார். மண் டல செயலாளர் கமலஹாசன் ஆர்ப் பாட்டத்தை துவக்கி வைத்தார். சிஐ டியு மாவட்ட செயலாளர் வினோத், நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளார் சங்க மாநிலச் பொரு ளாளர் ஏழுமலை கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில், சிஐ டியு மாவட்ட தலைவர் எல்.சங்கரலிங் கம், மாவட்ட பொருளாளர் நவீன் சந்தி ரன், நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க நிர்வாகி கள் வேளாணி, எல்.முருகேசன், எஸ். ராஜா, கண்ணபிரான் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, சங் கத்தின் மண்டல பொருளாளர் வி. கார்த்திக் நன்றி கூறினார்.