districts

தீ விபத்தால் சேதமடைந்த பேருந்து உரிமையாளருக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல், ஜன.23- தீ விபத்தால் சேதமடைந்த பேருந்தின் உரிமையாளருக்கு ரூ. 11 லட்சம் இழப்பீடு வழங்க வேண் டும் என நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. நாமக்கல்லில் தனியார் டிரா வல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர்  செந்தில்குமார் (56). இவருக்கு சொந்தமான பேருந்து ஒன்றை அர சுக்கு சொந்தமான இன்சூரன்ஸ் நிறு வனம் (National Insurance) ஒன் றில் ரூ.10 லட்சத்துக்கு காப்பீடு  செய்திருந்தார். கொரோனா பெருந் தொற்று ஊரடங்கு காரணமாக பேருந்தை கோயம்பேடு பேருந்து  நிலையத்தில் நிறுத்தி வைத்திருந் தபோது, கடந்த 2020 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் பேருந்தில் தீ  விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தால்,  பேருந்து சேதமடைந்து விட்டதால், காப்பீட்டுத் தொகை ரூ.10 லட் சத்தை வழங்குமாறு, அவர் இன்சூ ரன்ஸ் நிறுவனத்திடம் மனு அளித் தார். அதற்கு பேருந்துக்கு பெர்மிட்  காலாவதியாகிவிட்டது போன்ற காரணங்களை கூறி இன்சூரன்ஸ் தொகை முழுவதையும் தர அந்நிறு வனம் மறுத்து, பாதியளவு தொகையை தர ஒப்புக்கொண்டது. இதனால் பாதிப்படைந்த பேருந்து உரிமையாளர், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்தார். இந்நிலையில், விசாரணை முடி வடைந்த நிலையில், செவ்வா யன்று நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ் மற்றும் உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். அதில், கொரோனா காலத்தில் பேருந்து பெர்மிட் போன்றவற்றை வாங்குவதற்கு இயலாத சூழ் நிலை இருந்ததால், அதற்கு விதி  விலக்கு அளித்து ஒன்றிய அரசின்  போக்குவரத்துத்துறை அமைச்ச கம் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் முழு இன்சூரன்ஸ் தொகையையும் தர மறுப்பது இன் சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு என்று தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது. எனவே, இன்சூரன்ஸ்  நிறுவனம் பேருந்து உரிமையாள ருக்கு நான்கு வார காலத்திற்குள் முழு இன்சூரன்ஸ் தொகை ரூ.10  லட்சத்தையும், சேவை குறைபாட் டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப் பீடாக ரூ.1 லட்சத்தையும் வழங்க  வேண்டும், என உத்தரவிட்டுள்ளது.  மேலும், இது தவறினால் ஆகஸ்ட்  2020 முதல் பண வழங்கப்படும் நாள்  வரை ஆண்டொன்று ஒன்பது  சதவிகித வட்டி சேர்த்து வழங்க  வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.