நாமக்கல், ஜூன் 22- கருவில் உள்ள சிசுவின் பாலி னம் குறித்து பணத்திற்காக விபரங் களை வெளியிடும் ஸ்கேன் சென் டர்கள் மீது சட்டப்படியான நடவ டிக்கை எடுப்பது குறித்த ஆலோ சனை குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் மேற் கொண்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் குழந்தை களை காப்போம், பெண் குழந் தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தலைமையில் புதனன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த பெண் குழந்தைகள் அனைவரும் கல்லூரிகளுக்கு செல்வதை உறுதி செய்ய வேண் டும். குழந்தை திருமணங்கள் நடை பெறாத நிலையை உருவாக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அரசு செய்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை விளம்பரப்படுத்துவது, தாயின் கருவில் உள்ள சிசுவின் பாலினம் குறித்து விவரம் வெளியி டும் ஸ்கேன் சென்டர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது குறித்து அனைத்துத் துறை அலுவலர்க ளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் பேசு கையில், பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரு வதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, மாணவிகள் அனைவ ரும் பள்ளிக்கு வருவதை கண்கா ணித்து ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராவிட்டால் உட னடியாக பெற்றோரை தொடர்பு கொண்டோ அல்லது நேரில் சம் மந்தப்பட்ட மாணவியின் வீட்டிற்கு சென்று விவரங்களை கேட்டு அதன்படி மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
18 வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கோ, 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ திரு மணம் செய்வது குற்றமாகும். மீறு வோர் மீது குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006-ன் படி, குழந் தைத் திருமணம் புரியும் ஆண் நபருக்கு, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006, பிரிவு(9)-ன் படி, 2 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும், குழந்தைத் திருமணத் துக்கு உடந்தையாக இருப் போருக்கும், திருமணத்தை நடத்தி வைப்போருக்கும் இச்சட் டத்தின்படி, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் வரை அப ராதமும் விதிக்கப்படும். இந்த விவ ரங்களை ஆசிரியர்கள் மட்டுமல் லாது, ஊராட்சி தலைவர்களும் தங்கள் பகுதி பொதுமக்களுக்கு தெரிவித்து தங்கள் ஊராட்சியை குழந்தை திருமணம் நடைபெறாத ஊராட்சியாக உருவாக்க வேண் டும். ஊராட்சித்தலைவர்கள் தங் கள் பகுதியில் குழந்தை திருமணம் நடைபெறாமல் இருக்க பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்துவதோடு, குழந்தைகள் பாதுகாப்பிற்கான இலவச தொலைபேசி எண் – 1098 அனைத்து பொதுமக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். மாவட்டத்தில் ஆண், பெண் பாலின விகிதத்தை சரிசெய்வதற் காக பல்வேறு முயற்சிகள் எடுக் கப்பட்டு வருகின்றன.
இருந்த போதிலும் சில பகுதிகளில் ஆண், பெண் பாலின விகிதம் சராசரியி லிருந்து மிக குறைவாக உள்ளது. ஸ்கேன் பரிசோதனை மையங்க ளில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை தெரிவிக்க கூடாது என்று கடுமையான சட்டம் உள் ளது. தவறிழைக்கும் ஸ்கேன் சென் டர்கள் மீது உரிமை ரத்து செய்தல், சிறை தண்டனை விதித்தல் உள் ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க சட்டம் வழிவகை செய்கி றது. தங்கள் பகுதியில் ஆண், பெண் பாலின விகிதம் சமமாக உள்ள நிலையை தொடர்ந்து உரு வாக்கும் சுகாதார செவிலியர் மற் றும் அங்கன்வாடி பணியாளர்க ளும் மாவட்ட நிர்வாகத்தால் சிறப் பிக்கப்படுவதுடன், பெண் குழந் தைகளை காப்போம், பெண் குழந் தைகளுக்கு கற்பிப்போம் திட்டத் தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப் படும். நாமக்கல் மாவட்டத்தை பெண் குழந்தையின் பாதுகாப் பில் முன்னணி மாவட்டமாக உரு வாக்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் பி.கே.கீதா, மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் பரி மளாதேவி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதீஸ், செய்தி மக் கள் தொடர்பு அலுவலர் சி.சீனி வாசன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.