districts

img

கட்டுமானத் தொழிலாளர் சங்க காங்கேயம் தாலுகா மாநாடு

திருப்பூர், ஜூலை 18- சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் காங்கேயம் தாலுகா 17 ஆவது மாநாடு செவ்வாயன்று காங்கேயத்தில் நடைபெற்றது. காங்கேயம் பழையகோட்டை ரோட்டில் உள்ள தனியார்  மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்டுமான தொழி லாளர் சங்க காங்கேயம் தாலுகா தலைவர் கே. ஆர்.கன்னை யன் தலைமை ஏற்றார். இம்மாநாட்டில், தாலுகா துணைச்செய லாளர் மூர்த்தி கொடியேற்றி வைத்தார். சிஐடியு மாவட்ட  தலைவர் சி.மூர்த்தி துவக்க உரையாற்றினார். கட்டுமானத் தொழிலாளர் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் ஏ.ராஜன்,  மாவட்ட பொருளாளர் பி.ரமேஷ், அங்கன்வாடி ஊழியர் மற் றும் உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.சித்ரா, கைத்தறி நெசவாளர் சங்க மாவட்ட தலைவர் கே.திருவேங் கடசாமி, மின்வாரிய கோட்டச் செயலாளர் சந்திரசேகர், போக் குவரத்து ஊழியர் சங்க நிர்வாகி வின்சென்ட் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தீர்மானங்கள்: கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்ப டுத்தி கட்டிடத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும், கட்டு மானத் தொழிலாளர் நலவாரியத்தில் முத்தரப்பு குழு ஏற்றுக்  கொண்ட பரிந்துரைகளை அரசாணையாக வெளியிட்டு, ஓய் வூதிய உயர்வு உள்ளிட்ட பயன்களை உடனடியாக வழங்க  வேண்டும். நலவாரிய உறுப்பினர் புதுப்பித்தலில் தொழிற் சங்க நிர்வாகிகள் அங்கீகார சான்று வழங்குவதை உறுதிப் படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

நிர்வாகிகள் தேர்வு:

சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்க காங்கேயம்  தாலுக்கா தலைவராக வீராசாமி, தாலுக்கா செயலாளராக கணேசன், பொருளாளராக பாராதி உட்பட 15 பேர் கொண்ட  தாலுக்கா குழு தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, கட்டு மான தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செய லாளர் டி.குமார் நிறைவுறை ஆற்றினார்.  இம்மாநாட்டில், சென்னையில் செயல்படும் சிஐடியு நிர்மல் பள்ளிக்கு நான்கு நிர்வாகிகள் ரூ.3500 நன்கொடை வழங்கினார்கள். இம்மாநாட்டில் காங்கேயம் தாலுக்கா கட்டு மானத் தொழிலாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் காங்கேயம் தாலுகா உதவி தலைவர் வீராசாமி நன்றி  கூறினார்.