districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பொம்மிடி – கோம்பேரி இடையே இணைப்பு சாலை அமைத்திடுக

 தருமபுரி டிச.17- தருமபுரி மாவாட்டம், கோம்பேரி- பொம்மிடி மலைக ளுக்கிடையே இணைப்பு சாலை அமைக்க அப்பகுதி மக்கள்  மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கோம்பேரி பகுதியில் சிறு, சிறு மலைப்பகுதிகள் உள்ளன. இதில், 2 சிறிய மலைகளுக்கு இடையில் கணவாய் போன்ற ஒரு பகுதி உள்ளது. இந்த கணவாயை, சாலையை மாற்றி அமைத்துத் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட கால மாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சாலை அமைப்பதன் மூலம், தருமபுரியில் இருந்தும், நல்லம் பள்ளி, மிட்டாரெட்டி அள்ளி, லளிகம், கோம்பேரி உள்ளிட்ட  சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொம்மிடி, பாப்பிரெட் டிப்பட்டி மற்றும் சேலம் மாவட்ட பகுதிகள் உள்ளிட்ட இடங்க ளுக்கு எளிதாக செல்லும் நிலை உருவாகும். பொம்மிடி கோம்பேரி மலைகளிடையே சாலை அமைக்கப்பட்டால் சுமார் 2 லட்சம் ஏழை, எளிய மக்களின் போக்குவரத்துக்கு  பேருதவியாக அமையும். எனவே  பல ஆண்டுகளாக மக்கள் வலியுறுத்தி வரும் இத்திட்டத்தை மாவட்ட  நிர்வாகமும், தமிழக அரசும் செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விண்வெளி மற்றும் பாதுகாப்பு பூங்கா அமைக்கப்பதில் சிக்கல்

கோவை, டிச.17- சூலூர் அருகே விண்வெளி மற்றும் பாதுகாப்பு பூங்கா  அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள் ளதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காடாம்பாடி  பகுதியில் இந்திய விமானப்படை தளம் செயல்பட்டு வரு கிறது. இங்கு விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்கா  அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டு, பூங்கா அமைப் பதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. பூங்கா அமைப்பதற்காக விமானப்படை தளம் அருகே சுமார்  250 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.  இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், இதற்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், விமானப் படை தள சுற்றுச்சுவரில் இருந்து 100 மீட்டர் வரை தடை செய்யப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், சுற்றுச்சுவரில் இருந்து 100 மீட்டர் விளை நிலங்களை தவிர்த்து மற்ற இடங்களை கையகப்படுத்த முடிவு செய்துள் ளது அதிர்ச்சியளிக்கிறது. இதனால் அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு மத்தியில் 100 மீட்டர் இடைவெளியில் உள்ள  விவசாய நிலங்கள் எதற்கும் பயன்படாத நிலை உரு வாகும். ஏற்கனவே விமானப்படை தளத்துக்கு அருகாமையில் உள்ள பூமியை டிக்கோ நிறுவனம் மூலம் நிலம் எடுப்ப தாக அறிவித்திருந்த நிலையில், அதற்கான திட்ட மற்றும் ஆய்வு பணிகள் 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற் காக அப்பநாயக்கன்பட்டி, காங்கேயம் பாளையம் காடாம் பாடி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 250 ஏக்கர் நிலம்  எடுப்பதற்காக அளவீடு செய்யப்பட்டுள்ளது. விமானப் படைத்தள சுற்றுச்சுவரில் இருந்து 100 மீட்டர் வரை உள்ள விளை நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்ற அறி விப்பு விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. கைய கப்படுத்தப்படாத குறைந்தபட்ச இடத்தில் எந்த விவசாய மும் மேற்கொள்ள முடியாது. விமானப்படை தளத்தில் இருந்து 100 மீட்டர் வரை உள்ள நிலங்களையும், சேர்த்து  கையகப்படுத்த வேண்டும். அதற்கு இழப்பீட்டுத் தொகை யாக 10 கோடி வரை ஏக்கருக்கு வழங்க வேண்டும். இது குறித்து கோவை வரும் முதல்வரை நேரில் சந்தித்து கொடுக்க  உள்ளோம், என்றனர்.