districts

img

உ.பி.யில் மாணவர் சுட்டுக்கொலை: தருமபுரியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, மார்ச் 2- உத்தரபிரதேசத்தில் பட்டியலின மாணவரை சுட்டுக்கொன்ற  காவல்துறையை கண்டித்து, தருமபுரியில் காங்கிரஸ் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவர் சோமேஷ் படுகொலையில் நீதி வேண்டும். சோமேஷ் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். பட்டியலின மாணவரை சுட்டுக்கொன்ற காவல்துறை மீது வழக்குபதிந்து சட்டரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கி ரஸ் கட்சியின் எஸ்சி/எஸ்டி பிரிவு சார்பில், தருமபுரி தொலை பேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் திருமுருகன் சிறப்புரையாற்றினார். இதில் மாநில பொதுச் செயலாளர்கள் இராமசுந்தரம், வீரமுனிராஜ், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் மோகன், மாவட்ட நிர்வாகிகள் குமர வேல், கலைச்செல்வன், கலைவாணன், யுவராஜ், சங்கீதா, செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.