districts

img

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மார்ச் 7- நாமக்கல் – திருச்சி சாலையிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ)  முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது குறித்தான தேர்தல் பத்திரம் ரத்து சம்பந்தமாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்துடன் அது சம்மந்தப் பட்ட ஆவணங்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந் தியா (எஸ்பிஐ) வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஆவணங்கள் வழங்கு வதற்கு 4 மாதம் கால அவகாசம் கேட்கும் எஸ்பிஐ நிர்வாகத்தை கண்டித்து நாமக்கல் -  திருச்சி சாலையில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு, காங்கிரஸ் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டக்குழு சார்பில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சித்திக், நகரத் தலைவர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு தேர்தல் பத்திர நன்கொடைகளை வெளி யிட காலம் கடத்தும் பாரத ஸ்டேட் வங்கியை  கண்டித்து வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத் தத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி. திருச் செல்வம் தலைமை வகித்தார். துணைத் தலை வர் பா ராஜேஷ் ராஜப்பா, மண்டலத் தலை வர்களான அல்டிமேட் தினேஷ், ஆர் விஜய பாஸ்கர், எச்.எம் ஜாபர் சாதிக், முன்னாள் மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி ஆகியோர் உரையாற்றினர்.