பள்ளிபாளையம், மே 9- பிளஸ் 2 தேர்வில் வென்ற திரு நங்கை மாணவியை இந்திய மாண வர் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை ஞர்கள் சங்கத்தினர் செவ்வாயன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரி வித்தனர். தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3 வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் திங்களன்று வெளியிடப் பட்டன. இதில், மாணவிகளே அதிக மாக தேர்ச்சியடைந்தனர். மேலும், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தைச் சேர்ந்த திருநங்கை மாணவி ஸ்ரேயா பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு, 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மாநிலளவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற முதல் திரு நங்கை மாணவி என்ற சிறப்பு இவ ருக்கு கிடைத்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ் பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரி விசைத்தறி தொழி லாளி ஆவார். இவருடைய மகள் ஸ்ரேயா பள்ளிபாளையம், ஆவரங் காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில், திருநங்கை ஸ்ரேயா 600க்கு 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு களில் தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்த்த ஸ்ரேயாவை இந்திய மாண வர் சங்க நாமக்கல் மாவட்ட செயலா ளர் தே.சரவணன், மாவட்ட தலை வர் மு.தங்கராஜ் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் அருண்குமார் ஆகி யோர் நேரில் சென்று வாழ்த்துக் களை தெரிவித்தனர். மேலும், மாண வியின் உயர்கல்வி தொடர இந்திய மாணவர் சங்கம் உறுதுணையாக இருக்கும் என மாணவர் சங்கத்தி னர் மாணவி ஸ்ரேயாவிடம் தெரி வித்தனர். தமுஎகச வாழ்த்து இதேபோல், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவி ஸ்ரே யாவிற்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்த னர். தமுஎகச திருச்செங்கோடு நகரக் கிளை தலைவர் எம்.நித்தியானந் தன், மாவட்ட துணைத் தலைவர் ஜி.கோபி, நகரக்கிளை மெளலி தரன், கமலேஷ், தீபக், ஸ்டீபன் ஆகி யோர் உடனிருந்தனர்.