districts

img

மல்யுத்த போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

தருமபுரி, மார்ச் 16- மாநில அளவிலான மல்யுத்த போட் டிகளில் பதக்கங்களை வென்ற தரும புரி அரசு கலைக்கல்லூரி மாணவர்க ளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங் கத்தின் சார்பில், மாநில அளவிலான 10  ஆவது ஆடவருக்கான மல்யுத்தப் போட் டிகள் சேலம் மாவட்டம், மேட்டூரில் நடைபெற்றது. இப்போட்டியில் தரும புரி அரசு கலைக்கல்லூரி இளமறிவியல் வேதியியல் துறை இரண்டாமாண்டு மாணவர் ஆர்.சுரேந்தர் 74 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கமும், இளங்கலை வரலாறு இரண் டாமாண்டு மாணவர் ஆர்.சுரேந்திரா 63  கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு  வெண்கல பதக்கமும் வென்றனர். பதக் கம் வென்ற மாணவர்களுக்கு வெற்றிக் கான தகுதி சான்றிதழ்களையும், பதக் கங்களையும் வழங்கி, கல்லூரி முதல் வர் கோ.கண்ணன் பாராட்டு தெரிவித் தார். இந்நிகழ்வில் கல்லூரியின் உடற் கல்வித்துறை இயக்குநர் கு.பாலமுரு கன், வரலாற்றுத்துறை தலைவர் சாரதி, வேதியியல் துறைத்தலைவர் ரா.கிருபா கரன், விளையாட்டு குழு பேராசிரிய  உறுப்பினர்கள் கே.விஜயதேவன், வெண் ணிலா உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.