திருப்பூர், செப்.15- தொழிலை மீட்போம், தொழிலாளர்கள் வாழ்வாதா ரத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் அக்டோபர் 5ஆம் தேதி திருப்பூரில் கருத்தரங் கம் நடத்துவது என்று அனைத்து தொழிற் சங்க நிர் வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருப்பூர் அனைத்து பனி யன் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் சிஐடியு சங்கத் தலை வர் சி.மூர்த்தி தலைமையில் தியாகி பழனி சாமி நிலையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் ஒன்றிய அரசு அமலாக்கிய பணமதிப் பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் தவறான தொழில் கொள்கைகளால் பனியன் தொழில் நலிவுற்று பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்க ளுக்கு வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே வரும் அக்டோபர் 5ஆம் தேதி திருப்பூர் தொழிலை மீட்போம், தொழிலா ளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்துவது என்றும். கருத்தரங்கத்திற்கு ஆதரவாக திருப் பூர் நகரின் அனைத்து தொழில் அமைப்புகள் மற்றும் வர்த்தக அமைப்புகளின் ஆதரவை கேட்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இக்கருத்தரங்கில் தொழிற்சங்கங்களின் மாநிலத் தலைவர்களை பங்கேற்கச் செய் வது. கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கி திருப்பூர் முழுவதும் இரண்டு நாட்கள் பிரச் சார இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப் பட்டது. இதில், சிஐடியு சார்பில் ஜி.சம்பத், நாக ராஜ் ஏஐடியுசி சார்பில் எம்.ரவி, சேகர், எல்பி எப் சார்பில் க.ராமகிருஷ்ணன், ஜி.பாலசுப்ர மணியன், பூபதி, ஐஎன்டியுசி சார்பில் சிவ சாமி, மகுடபதி, எம்எல்எப் மனோகரன், எச்எம் எஸ் குணசீலன் ஆகியோர் கலந்து கொண் டனர்.