திருப்பூர், செப்.28 - அறிவியலாய் சிந்திப்போம், பின்னலாய் இணைவோம் என்ற முழக்கத்துடன், அறிவி யல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தீக்கதிர் நாளிதழ் சார்பில் திருப்பூரில் ஞாயிற் றுக்கிழமை மாரத்தான் ஓட்டம் நடத்தப்படு கிறது. ஊடக உலகில் உண்மையின் பேரொளி யாக செயல்படும் தீக்கதிர் நாளிதழ் திருப்பூர் நகரில் முன்னணி நாளிதழ்களில் ஒன்றாக விற் பனையாகி வருகிறது. இந்த நாளிதழ் சார்பில் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் அறிவியலாய் சிந்திப்போம், பின்ன லாய் இணைவோம் என்ற முழக்கத்துடன் மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. அக்டோபர் 1 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு திருப்பூர் காலேஜ் ரோடு ஹவுஸிங் யூனிட் அருகில் இந்த மாரத்தான் ஓட்டம் தொடங்குகிறது. ஹவுசிங் யூனிட்டில் இருந்து, சிக்கண்ணா கல்லூரி, கொங்கண கிரி, அணைப்பாளையம் என வஞ்சிபாளை யம் சாலையில் கனியாம் பூண்டி பிரிவு வரை 4 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் அதே வழித்தடத்தில் ஹவுசிங் யூனிட்டை வந்தடை கின்றனர். பரிசுத்தொகை மற்றும் பதக்கம் இந்த மாரத்தான் ஓட்டத்தில் ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். ஆண்கள் பெண்கள் இரு பாலருக்கும் தனித்தனியாக பரிசுகள் உண்டு. முதல் பரிசு ரூபாய் 10,000, இரண்டாம் பரிசு ரூபாய் 5000, மூன்றாம் பரிசு ரூபாய் 3000 வழங் கப்படும். இத்துடன் 5 ஆண்கள் மற்றும் 5 பெண்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூபாய் 1000 வீதம் வழங்கப்படும். இந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற் போர் ரூபாய் 100 செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து பங்கேற்போருக்கு டி-ஷர்ட் வழங்கப் படும். பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். அமைச்சர் துவக்கி வைக்கிறார் முன்னதாக மாநிலத் தமிழ் வளர்ச்சி மற் றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநா தன் சனிக்கிழமை (நாளை) காலை 7.30 மணி அளவில் தீக்கதிர் திருப்பூர் அலுவலகம் செயல்படும் தியாகி பழனிசாமி நிலையம் முன்பாக மாரத்தான் ஓட்டத்திற்கு பதிவு செய்திருக்கும் பத்து நபர்களுக்கு டீ சர்ட் வழங்கி அடையாளபூர்வமாக மாரத்தான் நிகழ்வை தொடங்கி வைக்கிறார். ஞாயிறன்று இந்த மாரத்தான் ஓட்டம் தொடக்க மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், சட்ட மன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் ஆர். பாலசுப்ரமணியம், தீக்கதிர் சிறப்பாசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி, தீக்கதிர் கோவை பதிப்பு பொறுப்பாளர் கே.காமராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ. மாணிக்கம், தீக்கதிர் எண்ம பதிப்பு பொறுப் பாசிரியர் எம்.கண்ணன் ஆகியோர் பங்கேற் கின்றனர். மாரத்தான் ஓட்டம் நடைபெறும் பகுதியில் நிகழ்வை ஒழுங்கு செய்யவும், இதர உத விகளுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண் டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். வழி யில் முக்கிய இடங்களில் குடிநீர் வசதியும், மருத்துவர் உள்ளிட்ட ஆம்புலன்ஸ் வாகனங் களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளோர் பங்கேற்கலாம் இந்த மாரத்தான் ஓட்டத்தில் பதிவு செய் தோர் தவிர, அறிவியல் விழிப்புணர்வை ஊக் குவிக்கும் வகையில் ஆர்வமுள்ளவர்களும் பங்கேற்கலாம் என்று தீக்கதிர் கோவை பதிப்பு பொறுப்பாளர் கே. காமராஜ் தெரி வித்தார். இந்த மாரத்தான் ஓட்டம் ஒருங்கிணைப் பாளர்கள் ச. நந்தகோபால், செ.மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மாரத்தான் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கவ னித்து வருகின்றனர்.