கோவை, மே 31- உத்தரகாண்ட் மாநிலத்தில் விபத்தில் உயிரிழந்த கோவை பத்திரிக்கையாள ருக்கு அஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் புத னன்று நடைபெற்றது. உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரிக்கு ஞாயிறன்று 14 பேர் வேனில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கோவையை சேர்ந்த ஆங்கில நாளிதழலின் (தி இந்து) செய்தியாளர் கார்த் திக் மாதவன்(45) உட்பட 2 பேர் உயிரிழந்த னர். கார்த்திக் மாதவனின் உயிரிழப்புக்கு தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் உட்பட பலரும் இரங்கல் தெரி வித்துள்ளனர். இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கோவை பத்திரிகையா ளர் மன்றம் சார்பில் உயிரிழந்த பத்திரிக்கை யாளருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் மற்றும் பத்திரிகையாளர்கள், செய்தி யாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உட்பட பல ரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர்.