districts

அரசு விழாக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பில்லை மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

கோவை, டிச.4–  அரசு விழாக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்க்கும் கோவை மாவட்ட ஆட்சிய ருக்கு மார்க்சிஸ்ட கட்சியின் கோவை  மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கோவை நாடாளுமன்ற உறுப்பினராக பி.ஆர்.நடராஜன் உள்ளார். இவர் மார்க்சிஸ்ட் கட்சியை சார்ந்தவர் என்பதால் தொடர்ந்து அரசு விழாக்களுக்கு அழைக்காமல் புறக் கணிக்கப்படுகிறார். இன்னும் சொல்லப் போனால் அரசு விழாவிற்கான அழைப்பி தழ்களே அடிப்பதில்லை. அழைப்பிதழ்கள் அரசு சார்பில் அச்சடிக்கப்பட்டால் இதில்  பி.ஆர்.நடராஜன் எம்.பி.,யின் பெயர்  இடம்பெற வேண்டும் என்பதற்காகவே  அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்படுவதில் லையோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.  இதற்கிடையே, ஏற்கனவே சென்னை யில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் சாவை வரவழைத்து அவிநாசி சாலையில் அமையவுள்ள மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் வியாழனன்று உள்ளாட்சித்துறை அமைச்சரை பிரப லப்படுத்தும் நோக்கத்தோடு அடிக்கல் விழா  அரசு சார்பில் நடைபெற்றுள்ளது. இவ்விழா வில் அதிமுகவின் கூட்டணிக் கட்சி யாக இருக்கிற காரணத்திற்கான பாஜகவின்  முன்னாள் எம்.பி., அழைக்கப்படுவதும்,  விழாவில் அவர் முன்னிலைப்படுத்தப்படுகி றார் என்பதும் இது அரசு விழாவா அல்லது இவர்களின் கூட்டணி கட்சிகளின் அணி வகுப்பு விழாவா என்கிற ஐயம் எழுகிறது. இவ்வாறு சமீப காலமாக அரசு விழாக்கள் அனைத்தும் அதிமுக விழாவைப் போன்ற ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமே முன்னின்று செய்கிறதோ என்கிற ஐயம் எழுகிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையான கண்ட னத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.  தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதியை அரசு விழாக்களுக்கு அழைக்காமல் இருப்பது என்பது கோவை மாவட்ட மக்க ளின் எண்ணத்திற்கு விரோதமானது என்பதை கோவை மாவட்ட ஆட்சியருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இது போன்ற செயல்கள் இனிமேலும் நடைபெ றாமல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்ப ளித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்து கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;