districts

img

எம்.பி.,க்கள் இடைநீக்கத்திற்கு கண்டனம்

நாமக்கல், டிச.22- எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக் கத்தை கண்டித்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப் பிய, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 146 நாடாளுமன்ற உறுப்பி னர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற னர். அதன்ஒருபகுதியாக தமிழ்நாடு முழுவதும் வெள்ளி யன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மாவட்டத் தலை வர் சர்வேயர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்ட னர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவ ரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.தீர்த்தரா மன் தலைமை வகித்தார். இதில் மாவட்டப் பொருளாளர் பி.ஜி.வடிவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதில் விசிக மாவட்டச் செயலாளர் தெய்வானை உட்பட பலர் கலந்து கொண்டனர்.