districts

கடைகளை அடைக்க சொல்லி மிரட்டும் காவல் துறைக்கு கண்டனம்

கோபி, டிச.10- இரவு 10 மணிக்கு மேல் கடை களை அடைக்க சொல்லி மிரட்டும் காவல்துறை அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு வணி கர் சங்கம் குரல் கொடுக்கும் என கோபிசெட்டிபாளையத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணி கர் சங்கங்களின் பேரமைப்பின் மாநி லத் தலைவர் விக்கிரமராஜா தெரி வித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு வியாபார நிறுவனங் களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைத்து அனைத்து வியாபாரிகள் முன் னேற்ற சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் துவங்குவதற்கான நிகழ்ச்சி  கோபிசெட்டிபாளையம் தனியார்  திருமண மண்டபத்தில் நடைபெற் றது. அனைத்து வியாபாரிகள் முன் னேற்ற புதிய சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப் பினர் செங்கோட்டையன்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்க ளாக கலந்து கொண்டனர். அப்போது விக்கிரமராஜா பேசுகையில், சென்னை மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு தனியார் கார்ப்ப ரேட் நிறுவனங்கள் உதவ முன்வர வில்லை. தற்போது வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தான் நிதி வசூலித்து நேரடியாக சென்று மக்க ளுக்கு உதவிகளை செய்து வரு கின்றனர். எனவே தனியார் கார்ப்ப ரேட் நிறுவனங்களையும், ஆன்லைன் வர்த்தகத்தையும் தடைசெய்து, வணி கர்களின் நலன் காக்கும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் புதிய சட் டங்களை ஏற்படுத்த வேண்டும். வணி கர்களின் கடைகளை இரவு 10 மணிக்கு மேல் அடைக்க சொல்லி காவல் துறையினர் மிரட்டி வருவதாகவும் அவர்களை மிரட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு வணிகர் சங்கம் குரல் கொடுக்கும். தற்போதைய நிலையில் உணவு பாதுகாப்பு சட்டங்கள் கடுமையாக உள்ளதாகவும், எந்த சூழ்நிலையி லும் வியாபாரிகளும், சாமானிய மக் களுக்கும் பாதிக்காமலிருக்க அனை வரும் வியாபாரிகள் சங்கத்தில் இணைந்து மக்களுக்கான பணிக ளில் ஈடுபட வேண்டும், என்றார். இந் நிகழ்ச்சியில் திமுக நெசவாளர் அணி மாநிலச் செயலாளர் சிந்து ரவிச்சந்தி ரன், அனைத்து வியாபாரிகள் முன் னேற்ற சங்க நிர்வாகிகள் விஜய் கருப்புசாமி, தட்சிணாமூர்த்தி, சிவா உட்பட 500க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண் டனர்.