திருப்பூர், அக்.24 – திருப்பூர் வடக்கு ஒன்றியப் பகுதியில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு பங்காற்றிய மூத்த தோழர் பெருமாநல்லூர் வி.பி.சாமிநாத னின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி ஞாயிறன்று வலசுப்பாளையம் மற்றும் பெருமாநல்லூர் கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஈட்டிவீரம்பாளையம் கிளைச் செயலாளர் கே.சுப்பிரமணி யம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், கட்சி யின் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, வள்ளிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வி.என்.முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் பி. கே.கருப்பசாமி மற்றும் வி.பி.சாமிநாதன் குடும்பத்தார் உட்பட திரளானோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செய லாளர் ஆர்.குமார் ஆகியோரிடம் அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் கட்டிட நிதியாக, விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழுவின் சார்பில் ரூ.19,500-ஐ வடக்கு தலைவர் கே.ரங்கசாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.அப்பு சாமி, உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர். விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.கே.கொளந்தைசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம், வி. தொ.ச வடக்கு ஒன்றிய தலைவர் பரணி ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.