கோவை, செப்.1- மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழிய ரும், கோவை கோட்டை மேடு கிளையின் முன்னாள் செயலாளருமான தோழர் சகாப்பு தீன் (78) காலமானார். இவரின் மறைவை யடுத்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று இறுதியஞ்சலி செலுத்தினர். இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு வின் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவராகவும், மார்க் சிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட மேற்கு நகரக் குழு உறுப்பினராக செயல்பட்டவர் தோழர் சகாப்புதீன். இஸ்லாமிய மக்கள் நெருக்க மாக வாழும் பகுதியில் ஒன்றான கோவை கோட்டைமேட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை அமைத்து அங்கு நீண்டகாலம் கிளை செயலாளராக பணியாற்றினார். கட்சியின் கருத்துகளை, இயக்க செயல்பாடுகளை தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே கொண்டு செல்வதும், பகுதியில் உள்ள அடிப் படை பிரச்சனைகளுக்கான இயக்கத்தை முன்னெடுத்து வந்தவர்.
2007 ஆம் ஆண்டு கோவை உக்கடத்தில் தூய்மைப்பணியில் ஈடுபடும் அருந்ததியர் மக்கள் அதிகம் வசித்து வந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து. 12 பேர் உயி ரிழந்தனர். அச்சமயத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த மக்களை மீட்கும் பணியில், தோழர் சகாப்புதீனும், இவரது இளைய மக னும் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது எதிர் பாராதவிதமாக இவரது மகன் மீது ஒரு பகுதி கட்டிடம் சரிந்து விழுந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தனது இரங்கல் உரையில், தன் மகன் இறந்தார் என்கிற துயரத்திலும், மக்களை காப்பாற் றவே தன் மகன் உயிர் நீத்தான் என்று தனக்கு ஆறுதல் சொல்ல வந்த தோழர்களை ஆறுதல் படுத்தியவர் தோழர் சகாப்புதீன் என்றார். தோழரின் மறைவையறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலா ளர் சி.பத்மநாபன், மேற்கு நகரக்குழு செயலா ளர் பி.சி.முருகன் மற்றும் சுமைப்பணி சங்க நிர்வாகிகள், சாலை போக்குவரத்து உள் ளிட்ட கட்சி மற்றும் வர்க்க, வெகுஜன சங் கங்களின் நிர்வாகிகள் ஊழியர்கள் திரளா னோர் நேரில் மறைந்த தோழர் சகாப்பு தீனுக்கு தங்களின் இறுதியஞ்சலியை செலுத் தினர். இதனையடுத்து வியாழனன்று ஆத்து பாலத்தில் உள்ள கபர்ஸ்தானில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.