திருப்பூர், டிச.26- மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் கருவம்பாளையம் மூத்த தோழர் என்.வேலுசாமியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயி றன்று அனுசரிக்கப்பட்டது. கருவம்பாளையம் என்.வேலுசாமி ஆரம்ப காலத்தில் தீக்கதிர் நாளிதழ் விநியோகிப்பாளராக செயல்பட்டவர். திருப்பூர் தெற்கு நகரப்பகுதி, கருவம்பாளையம் வட்டாரத்தில் கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்ட மூத்த தோழர்களில் ஒருவர். அவரது 5 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கருவம்பாளையம் மற்றும் கே.வி.ஆர்.நகர் கிளை அலுவலகங்கள் முன்பாக என்.வேலுசாமி உருவப்படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கட்சியின் மாநகரக்குழு உறுப்பினர் பி.பாலன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜி.ஈஸ்வரமூர்த்தி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பா.ஞானசேகரன் உள்பட கட்சி அணியினர் திரளானோர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.