districts

img

மானுடத்தின் மகத்தான தலைவர் தோழர் என்.சங்கரய்யா

சேலம், நவ.17- நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தி லும், விடுதலைக்கு பிறகு உழைக்கும் மக்க ளின் விடுதலைக்கான போராட்டத்தில் 9 ஆண்டு  சிறை வாசம், தலைமறைவு வாழ்க்கை என எண் ணற்ற தியாகங்களை புரிந்த தோழர் என்.சங்க ரய்யா கடந்த புதனன்று காலமானார். மானுடம்  பெற்ற மகத்தான தலைவன் தோழர் என்.சங்க ரய்யாவின் மறைவையடுத்து, பல்வேறு பகுதி களில் உழைக்கும் மக்கள், சர்வ கட்சியினர் பங் கேற்கும் இரங்கல் கூட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. சேலம் மாவட்டம், மேட்டூரில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற இரங்கல் ஊர் வலம் மேட்டூர் மாதா கோவில் முன்பு துவங்கி, சின்ன பார்க் அருகே நிறைவுற்றது. இதைய டுத்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு செ.கருப்பண்ணன் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் இடைகமிட்டி செயலாளர் எஸ். வசந்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ. இளங்கோ, திராவிடர் விடுதலைக் கழக அ. சக்திவேல், சிபிஐ ராஜேந்திரன், விசிக சிவக் குமார், திமுக ராஜா, சிஐடியு சுந்தரராஜன், மாதர் சங்க நிர்வாகி எஸ்.எம்.தேவி உட்பட ஏராளமானோர் பங்கேற்று சங்கரய்யாவிற்கு புகழஞ்சலி செலுத்தினர். இதேபோன்று சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இரங்கல் கூட் டத்திற்கு சிபிஎம் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.குழந்தை வேல், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்டத்  தலைவர் ஆர்.நரசிம்மன், ஓய்வுபெற்றோர் அமைப் பின் செயலாளர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மஞ்சூர்

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் நடை பெற்ற சங்கரய்யா இரங்கல் நிகழ்விற்கு, சிபிஎம்  கிளைச் செயலாளர் மாதவன் தலைமை வகித் தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எல்.சங்கரலிங்கம், தாலுகாச் செயலாளர் நவீன்சந்திரன், காங்கிரஸ் மாநிலத் துணைச் செயலாளர் நாகராஜ், திமுக முன்னாள் செயலா ளர் தமிழ்ச்செல்வன், அதிமுக ஒன்றியச் செயலா ளர் ஆர்.எஸ்.வசுந்தரராஜன், சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினர் ரகுநாதன், பாஜக மாவட்டச் செயலாளர் சேட்பாபு உட்பட பலர் கலந்து கொண்டு, சங்கரய்யாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கோபி

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே அனைத்துக்கட்சி சார்பில் இரங்கல் கூட்டம், சிபிஎம் தாலுகாச் செயலாளர் ஜி.ஏ.துரைசாமி தலைமையில் நடை பெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முனுசாமி, மாவட்டக்குழு உறுப்பி னர் முத்துச்சாமி, சிபிஐ மாவட்ட துணைச்செய லாளர் வெங்கடாசலம், பரமேஷ்வரன், தீண் டாமை ஒழிப்பு முன்னனியின் மாவட்டச் செயலா ளர் அண்ணாதுரை, காங்கிரஸ் மாரிமுத்து, மனித நேய மக்கள் கட்சி சம்சுதீன், மதிமுக மகேந்தி ரன், பாமக சரவணன், திராவிட பஞ்சாலை தொழி லாளர் சங்க காளியப்பன், மாதர் சங்க மல்லிகா,  முத்தாயம்மாள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் தோழர் சங்கரய்யா இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிபிஎம் தாலுகாச் செயலாளர் கே.கனகராஜ் தலைமை  வகித்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், திக மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, காங்கிரஸ் தங்கமணி, விசிக குப்புராஜ், சிபிஐ வெள்ளியங்கிரி, மன் சூர், அதிமுக நகர்மன்ற உறுப்பினர் தனசேகர், தபெதிக மாவட்டச் செயலாளர் சந்திரசேகர், திவிக ராமச்சந்திரன், பகுத்தறிவு கழகத்தின் ரங் கசாமி, மதிமுக இக்பால், திமுக மாநில தலைமை  செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முக சுந்தரம்,  பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பாபு ராதாகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்கத்தின்  செந்தில், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, தாலுகாச் செயலாளர் மெகபூ நிஷா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலா ளர் பாதுஷா, சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்க  பொதுச்செயலாளர் பாட்ஷா உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு,  சங்கரய்யாவிற்கு புகழஞ்சலி செலுத்தினர். முடி வில், சிபிஎம் தாலுகாக்குழு உறுப்பினர் சிராஜு தீன் நன்றி கூறினார்.