நாமக்கல், ஜூலை 16- மார்க்சிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு நகர செயலா ளராக பணியாற்றி மறைந்த தோழர் எம்.சிவானந்தம் படத் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு நகர செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டவர் தோழர் எம்.சிவானந்தம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக கால மானார். இந்நிலையில், திருச்செங்கோடு தியாகி காவேரி நினைவகத்தில், அவரின் படத்திறப்பு விழா ஞாயிறன்று நடை பெற்றது. இந்நிகழ்விற்கு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர் ஏ.ஆதிநாராயணன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினரும், தீக்கதிர் முதன்மை பொது மேலாளரு மான என்.பாண்டி, தோழரின் படத்தை திறந்து வைத்து, நினைவுரையாற்றினார். இந்நிகழ்வில், கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எ.ரங்கசாமி, பி.பெருமாள், எம்.அசோகன், ஜெயமணி, கணேஷ் பாண்டியன், ஏ.டி.கண்ணன், திருச்செங்கோடு ஒன் றிய செயலாளர் மனோகரன், தமுஎகச மாவட்ட செயலாளர் எஸ்.சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடி வில், நகர செயலாளர் ஐ.ராயப்பன் நன்றி கூறினார்.