districts

img

தோழர் எம்.ஆறுமுகம் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

பென்னாகரம், அக்.25- மக்கள் போராளி தோழர் எம். ஆறுமுகம் 4 ஆண்டு நினைவேந்த  நிகழ்ச்சி புதனன்று பென்னாகரத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தருமபுரி மாவட்ட செயற்குழு  உறுப்பினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என பல் வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டவர் தோழர் எம்.ஆறு முகம். மக்கள் பிரச்சனைகள் தொடர் பான போராட்டங்களில் முன் நின்று களமாடினார். தோழர் எம்.ஆறுமுகத் தின் 4 ஆண்டு நினைவு தினம் புத னன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. பென் னாகரம், மடம் கிராமத்திலுள்ள அவ ரது நினைவிடத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன் தலைமை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாநிலக்குழு உறுப்பினர் பி.இளம்பருதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, சோலை அர்ஜூனன், எம்.முத்து, வி. விஸ்வநாதன், ஆர்.மல்லிகா ஆகி யோர் நினைவேந்தல் உரையாற்றி னர். இதில் தபெதிக மாவட்டச் செய லாளர் சந்தோஷ் குமார், திராவிடர் கழக மாநில பொதுக்குழு உறுப் பினர் தீர்த்தகிரி, அதிமுக நகரச் செய லாளர் பி.எம்.சுப்பிரமணி, மனித நேய மக்கள் கட்சி பொறுப்பாளர் ஜாகீர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட ஏராளமான கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர். முடிவில், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.ஜீவா னந்தம் நன்றி கூறினார்.