தோழர் கே.எஸ்.கே என்று அனை வராலும் அன்போடு அழைக்கப்படும் கே.எஸ்.கருப்பசாமி அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள் (அக்.7) இன்று. தனது கடைசி காலத்தில் தொண்டைப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டபோதும் அவருக்கே உரிய இயல்போடு, துணிவுடன் நோயை எதிர்த்துப் போராடி மர ணத்தைத் தள்ளிப் போட்டவர். திருப்பூர் மண்ணின் செங்கொடி இயக்கப் போராட்ட வரலாற்றில் கே. எஸ்.கே. என்ற பெயர் தனிச்சிறப்பாக பதிக்கப்பட்டுள்ளது. ஆயிரமாயிரம் உழைப்பாளிகளின் நெஞ்சங்களில் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டி ருக்கிறார். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கே.எஸ்.கருப்பசாமி சிறு வயதில் கோவைக்குச் சென்று டெக்ஸ்டூல் நிறுவனத்தில் வேலை செய்தவர். அங்கே தொழிற்சங்க இயக்கத்தில் பங்கேற்று துடிப்புடன் செயல்பட் டதால் பழிவாங்கப்பட்டவர். தோழர் கே.ரமணி உள்ளிட்ட மாபெரும் தலைவர்களின் வழிகாட்டுதலில் தொழிற்சங்க ஊழியராக தன் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொண்டவர். பிற்பாடு திருப்பூருக்கு வந்து, இங்கு அனைத்துப் பகுதி தொழி லாளர்களை அணிதிரட்டுவதில் தீவி ரமாக செயல்பட்டார். லாரி ஓட்டுநர் கள், சாக்குத் தொழிலாளர்கள், மாட் டுவண்டி தொழிலாளர்கள், சுமைப் பணி தொழிலாளர்கள், பனியன் தொழிலாளர்கள் என தொழிலாளி வர்க்கத்தை சங்கமாக அணிதிரட்டு வதில் முன்னணி களப்பணியாளராக திகழ்ந்தார். அத்துடன் சமூக ஒடுக்குமுறை, காவல் துறை அராஜகம் போன்ற வற்றை எதிர்த்து களத்தில் நின்று போராடக்கூடியவர். தொழிலாளர் களின் நம்பிக்கைக்குப் பாத்திரமா னவர். அவர்களுக்கு உத்வேகம் ஊட்டக்கூடியவர்.
மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு முழுவதும் தொழிலாளி வர்க்கத்தை, போராட்டக் களத்தில் இருக்கக்கூடியவர்களை ஈர்க்கக்கூ டியது அவரது பேச்சு. திரைப்படங் கள், சாமானிய மக்களின் பழக்க வழக்கம், பண்பாட்டு அம்சங்களை பாமரர்களும் கேட்டுப் புரிந்து கொள் ளும் வகையில், நகைச்சுவையாக வும், அதே சமயம் போராட்ட உணர்வு ஊட்டக்கூடியதாகவும் இருக்கும் அவரது பேச்சு என்று மூத்த தலை முறையினர் சொல்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் பிரதேசக் கமிட்டி செயலாளராக செயல்பட்டவர். ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பணியாற்றி இருக் கிறார். நேரம் தவறாமை அவரது முக் கியமான பண்பு. மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். ஏமாற்றுத்தனம், போலித்தனம், பகட்டு ஆகியவற்றை தனது எள் ளல் பேச்சில் தோலுரித்து விடுவார். அவர் மரணமடைந்து அவரது உடல் மார்க்சிஸ்ட் கட்சி அலுவ லகத்தில் வைக்கப்பட்டபோது, அஞ் சலி செலுத்த வந்த கூட்டம் அவர் வாழ்ந்த கம்யூனிஸ்ட் வாழ்க்கைக்கு சாட்சியாகத் திகழ்ந்தது. பரம ஏழை கள், கிழிசல் உடை உடுத்திய தொழி லாளர்கள், பெண்கள் என ஆயிரக்க ணக்கில் வந்து கண்ணீர் மல்க அஞ் சலி செலுத்தினர். இன்றைய இளம் தலைமுறை கம்யூனிஸ்டுகள் அவர் வரலாற்றை படித்தறிய வேண்டும். அவர் ஒரு தீப்பொறி! ஆம், இன்றும் பெரு நெருப்பைப் பற்ற வைக்கும் தீப் பொறி தோழர் கே.எஸ்.கே! -வே.தூயவன்