districts

img

உதவித்தொகை கிடைக்காத தலித் மாணவிகளை கல்லூரியில் இருந்து வெளியேற்றுவதாக புகார்

சேலம், அக்.18– கல்வி உதவித்தொகை கிடைக்காத தலித் மாணவி களை கல்லூரி நிர்வாகம் வகுப்புகளை விட்டு வெளி யேற்றுவதாக இந்திய மாண வர் சங்கத்தினர் சேலம் ஆட் சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சேலம் மாவட்டம், சங்ககிரி அருகில் உள்ள ஸ்ரீசண்முகா பொறியியல் கல்லூரியில் தலித் மாணவிகள் எண்ணற்றோர் பயின்று வரு கின்றனர். அரசு வழங்க வேண்டிய கல்வி உத வித்தொகை கல்லூரிக்கு வந்து சேராத நிலை யில், கல்லூரி நிர்வாகம் உடனடியாக கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு மாணவிக ளுக்கு தெரிவித்துள்ளனர். இதுசம்பந்தமாக கல்லூரி நிர்வாகத்திடம், கல்வி உதவித் தொகை வந்தவுடன் கல்விக் கட்டணத்தை கட்டுவதாக மாணவிகளின் பெற்றோர்கள் தெரிவித்தும், கல்லூரி நிர்வாகத்தினர் மாண விகளை வகுப்புக்குள் அனுமதிக்கவில்லை. மேலும், வங்கியில் கடன் வாங்கி கல்வி கட் டணத்தை செலுத்துமாறு மாணவிகளை வற் புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த  கல்லூரி மாணவிகள் இந்திய மாணவர் சங்கத் திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அருண்குமார் தலைமையில் பாதிக் கப்பட்ட மாணவிகள், தனியார் கல்லூரி நிர் வாகத்தின் அடாவடிதனம் குறித்தும், தமிழக  அரசு உடனடியாக தலித் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொ கையை வழங்க வலியுறுத்தியும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்  அளித்தனர். இதில் மாணவர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கோகுல் ராஜ், நவீன் உட்பட பலர் உடனிருந்தனர்.