சேலம், டிச.21- வாழப்பாடி பகுதியில் சாலைக ளின் இருபுறமும் கொட்டி வைக்கப் பட்டுள்ள பாக்குத்தோலை எரிப் பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவ தாக அப்பகுதி பொதுமக்கள் தெரி வித்துள்ளனர். சேலம் மாவட்டம், வாழப்பா டியை அடுத்த சிங்கிபுரம், கொட்ட வாடி, குறிச்சி, பொன்னாரம்பட்டி பகு திகளில் பாக்குக்காய்களில் இருந்து கொட்டைப்பாக்கு பிரித்தெடுத்த பிறகு, எஞ்சிய பயன்படாத பாக்குத் தோலை சாலையோரங்கள், மயா னம், ஆறு, ஓடை, குளம், குட்டை உள் ளிட்ட நீர்நிலைகள், பொது இடங் களில் கொட்டப்படுகிறது. மேலும், இந்த பாக்குத்தோல் குவியல்க ளுக்கு தீ வைத்து எரிக்கவும் செய்யப் படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு மழைக்காலத்தில் துர்நாற்றம் வீசி சுகாதாரச்சீா்கேடு ஏற்படுகிறது. குறிப்பாக, வாழப் பாடி ஊராட்சி ஒன்றியம், சிங்கிபுரம் கிராமத்தில், வாழப்பாடி - தம்மம்பட்டி பிரதான சாலையின் இருபுற மும், குவியல் குயிலாக பாக்குத்தோ லைக் கொட்டி தீ வைக்கப்படுகிறது. இதனால் சாலை தெரியாத அள வுக்கு இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக உள்ளது. வாகன ஓட்டி கள் சாலையைக் கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சிங்கிபுரம் ஊராட்சி நிர் வாகத்திடம் பலமுறை புகார் தெரி விக்கப்பட்டும், மாவட்ட ஆட்சியரி டம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யும் எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை என சமூக ஆர்வலர் கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, சிங்கிபுரம் கிராமத்தில் தொடர்ந்து வரும் பாக்குத்தோல் சுற் றுச்சூழல் மாசுபாடு பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண சேலம் மாவட்ட நிா்வாகம், வாழப்பாடி ஊராட்சி ஒன் றிய அதிகாரிகள் விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுப்புற கிராம மக்கள், வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.