districts

img

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மாதாந்திர கூட்டத்தில் அடுக்கடுக்காய் குவிந்த புகார்கள்

ஈரோடு, செப்.6- பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் ஏராளமான புகார்கள் குவிந்தன. ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்திலி ருந்து வரும் விஷக்கழிவு நீரால் பாலத்தொழுவு குளம் நிரம்பி அவிநாசி - அத்திக்கடவு திட்டம் உபயோகமில்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த 12 மாதங்களாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஈரோடு மாவட்ட நிர்வாக மும், மாசுகட்டுப்பாட்டு வாரியமும் இதனை கவனத்தில் கொள்ளவில்லை. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கம் உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகள் புகார் தெரிவித் தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சிறப்பு குழுவினரை அமைத்து ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நி லையில், செவ்வாயன்று மாசு கட்டுப்பாட்டு வாரிய நேரடி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தினை, புதி தாக பொறுப்பேற்றுள்ள பெருந்துறை மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் பழனிசாமி தலைமையேற்று நடத்தி னார். மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். பெருந்துறை சட்டமன்ற உறுப்பி னர் ஜெயக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரா.சா. முகிலன், சென்னி மலை பூப்பறிக்கும் மலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப் பாளர் செ.சதீசு, கோபி கவுண்டம்பாளையம் சட்டவிரோத கல் குவாரி எதிர்ப்பு போராளிகள் பழனிசாமி, சந்திரசேகரன் உள் ளிட்ட விவசாயிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர். இதில், சிப்காட் விஷக்கழிவுநீர் பிரச்சனையை பற்றி புகார் தெரிவித்து பேசினர். அதற்கான தீர்வுகளுக் கான பல்வேறு வழிமுறைகளை முன்வைத்துப் பேசி மனுக் களை அளித்தனர்.