திருப்பூர், டிச.7- தனியார் கழிவு நீர் அகற்றும் பணியா ளர்கள் கழிவு நீரை நேரடியாக நொய் யல் ஆற்றில் திறந்துவிடுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக இடுவம்பாளையம் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் மனித கழிவுகளைச் சுத்திகரித்து வெளியேற்ற கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மாநக ராட்சி ஊழியர்கள் மற்றும் தனியார் கழிவு நீர் அகற்றும் பணியாளர்கள் கழிவு களைச் சுத்திகரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லாமல், சாலை ஓரங்களி லும், நொய்யல் ஆற்றிலும் நேரடியாகத் திறந்து விடுகின்றனர். இதனால் அப்பகு தியில் கடுமையான துர்நாற்றம் ஏற்படுவ துடன் நோய்த் தொற்று ஏற்படும் அபாய மும் உள்ளது. வியாழனன்று இடுவம்பா ளையம் அருகே மாநகராட்சியில் ஒப்பந் தம் பெற்றுள்ள தனியார் நிறுவன ஊழி யர்கள் வீட்டில் சேகரித்த கழிவு நீரைச் சாலையோரம் வெளியேற்றினர். இத னால் அப்பகுதியில் கடுமையான துர் நாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அப்ப குதியைச் சேர்ந்த சில நபர்கள் அவர் களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது டன் வீடியோ பதிவு செய்தனர். இதனை யடுத்து எந்த விதப் பதிலும் கூறாமல் சென்று விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், ஊழியர்களின் அலட்சியப் போக்கை அதிகாரிகள் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக் கையில், செப்டிக் டேங்கில் இருந்து எடுக்கப்படும் மனித கழிவுகளை ஆற் றில் விடுவது குறித்து புகார் வந்தால், கடுமையாக நடவடிக்கை எடுக்கப்ப டும். ரூ.2000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். மீண்டும் அதே தவறை செய்தால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். முல்லை நகர், தனலட்சுமி நகர், வஞ்சிப்பாளை யும் ஆகிய பகுதிகளில் கழிவு நீர் கால் வாய் இல்லாததால் வீடுகளில் தொட்டி கட்டி அதில் கழுவு நீர் சேகரிக்கப்படும். மாநகராட்சி சார்பிலும் தொட்டிகள் கட் டப்பட்டுள்ளது. அதிலிருந்து சேகரிக்கப் படும் கழிவு நீர் சில சமயம் இது போல் ஆற்றில் வெளியேற்றுவார்கள். திருப்பூ ரில் சீர்மிகு நகரம் திட்டத்திற்கான பணி கள் நடைபெற்று வருகிறது. இத்திட்டப் பணிகள் நிறைவடையும் பொழுது இப்பி ரச்சனைகளுக்கு முழு தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்தனர்.