districts

மைவி3ஏட்ஸ் நிறுவனம் வேறு பெயரில் மோசடி ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

கோவை, பிப்.5- மைவி3ஏட்ஸ் நிறுவனம் வேறு பெயரில் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என ஆசைக் காட்டி மோசடி செய்ததாகவும், மருத்துவர் கள் பரிந்துரையின்றி மாத்திரைகளை விற்பனை செய்ததாகவும் மைவி3 ஏட்ஸ் என்ற நிறுவனத்தின் மீது, அண்மையில் கோவை மாநகர காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்தனர். இதையடுத்து கடந்த 29 ம் தேதியன்று அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவும், பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி 5 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் நீலாம்பூர் பகுதியில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.  இந்த நிலையில் மைவி3 ஏட்ஸ் நிறுவ னம் வி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில்  ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக் கில் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்டவர் கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் புகார் மனு அளித்தனர். அந்நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட ஸ்டாலின் என்பவர் கூறுகை யில், ”கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வி3  ஆன்லைன் டிவி என்ற நிறுவனத்தை விஜயராகவன், குமாரி, சிவசங்கர் ஆகி யோர் இணைந்து துவங்கினர். கோவை காந் திபுரம் கிராஸ்கட் சாலையில் இந்த நிறு வனத்தின் அலுவலகம் இயங்கி வந்தது. 600 ரூபாய் செலுத்தி ஒரு தயாரிப்பை வாங் கிய பின்னர், விளம்பரம் பார்த்தால் வருமா னம் வரும் என கூறினர். 18 ஆயிரம் ரூபாய்  கட்டி 6 நபர்களை சேர்த்து விட்டால் மாதம்  12 ஆயிரம் ரூபாய் வருமானம் வரும் என வும், இல்லையெனில் 1 இலட்சத்து 26 ஆயி ரம் ரூபாய் செலுத்தி உறுப்பினரானால் மாதம்தோறும் வருமானம் வரும் என கூறி னர். இதனை நம்பி பலர் முதலீடு செய்த னர். இரண்டு ஆண்டுகள் முறையாக பணம்  அளித்து வந்த அந்த நிறுவனம், திடீரென ஒரே நாளில் மூடப்பட்டது. அந்த நிறுவனத்தில் மார்கெட்டிங் டைரக்டராக இருந்த சக்தி ஆனந்த் என்ப வரை வைத்து தற்போது மைவி3 ஏட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் துவங்கி வசூல்  வேட்டை நடத்தி வருகின்றனர். சக்தி  ஆனந்த் ஒரு பினாமி. இந்த நிறுவனத்தை யும் விரைவில் மூடும் திட்டம் அவர்களுக்கு உள்ளது. இவர்கள் மீது பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்கள் மீது மேலும் பலர் புகார் அளிப் பார்கள் எனத் தெரிவித்தார். போலீசார் விசாரணை விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமா னம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி மோசடி  செய்ததாகவும், மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் ஆயுர்வேத மருந்துகள் விற்பனை  செய்ததாகவும் கூறி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மை வி3 ஏட்ஸ் நிறுவ னத்தின் மீது போலீசார் 4 பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கு  குறித்து விசாரணை மேற்கொள்ள நேரில்  ஆஜராகுமாறு, மை வி3 ஏட்ஸ் நிறுவனத் தின் உரிமையாளர் சக்தி ஆனந்த்திற்கு போலீ சார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலை யில் விசாரணைக்காக சக்தி ஆனந்தன் திங்க ளன்று, ஆஜரானார். அவரிடம் கோவை மாந கர குற்றபிரிவு போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தினர்.