கோவை, டிச.8- பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில், குற்றவாளிக்கு துணை போவ தாக, 11 ஆசிரியர்கள் மற்றும் 4 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க மாணவர், மாதர், வாலிபர் சங்கம் மற்றும் திண்டாமை ஒழிப்பு முன்னணி யினர் ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். கோவை மாவட்டம், ஆலந்துறையில் 13 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத் தல் அளித்ததாக, பள்ளியின் உடற்கல்வி ஆசி ரியர் ஆனந்தகுமார் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரத்தை ஆரம்பம் முதலே அப்பள் ளியின் ஆசிரியர்கள் மறைப்பதற்கு முயன்ற னர். இதற்கு உடந்தையாக காவல்துறையின ரும் இருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்தது. இதனையடுத்து, இவ்விவகாரத்தில் சம்பந் தப்பட்ட அணைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார்பாடி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய இயக்கங்களை சார்ந்த நிர் வாகிகள் புகார் அளித்தனர். இதுகுறித்து, இவ்வமைப்பின் நிர்வாகி கள், யு.கே.சிவஞானம், சுதா, அசாருதீன், தினேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாலியல் சம்பவம் குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 11 ஆசிரியர்களிடமும், பாதிக்கபட்ட மாணவி புகார் தெரிவித்தும் ஆசிரியர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆசிரியர் கள் இதை வெளியில் பேசக்கூடாது என குழந்தையை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி யின் குடும்பத்தினரை சமாதானப்படுத்தும் விதத்தில் ஆசிரியர்கள் செயல்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு குறித்து முறையாக விசாரணை மேற்கொள்ளாமல் போக்சோ விதிமுறைகளை மீறி பெண் காவலர்கள் குழந்தையை காவல் நிலையம் அழைத்து வந்து, பல மணி நேரம் காவலர் சீருடையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். எனவே, போக்சோ சட்ட விதிகளுக்கு முரணாக செயல் பட்ட காவல்துறையினர் நான்கு பேர் மீதும், சம்பவம் குறித்து தெரிந்தும் அதை மறைக்க முயன்ற ஆசிரியர்கள் 11 பேர் மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள் ளோம், என்றனர்.