districts

img

ஓய்வில்லாமல் வேலை வாங்குவதாக புகார் போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா

ஈரோடு, ஜன. 31- ஓய்வே அளிக்காமல் தொடர்ந்து வேலை  வாங்குவதாக குற்றம்சாட்டி ஈரோடு காசி பாளையம் அரசு பேருந்து பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் நள்ளிரவில் திடீ ரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலத்திற்குட்பட்ட ஈ1, ஈ3 கிளைகள் ஈரோடு காசிபாளையத்தில் செயல்படுகிறது. பள்ளிபாளையத்தில் செயல்பட்டு வந்த  ஈ2 கிளை, பாலம் கட்டுமானப் பணிகள் கார ணமாக, இப்பணிமனைக்கு மாற்றப்பட் டன. இக்கிளை தனியாகச் செயல்படா மல் ஈ1 மற்றும் ஈ3ல் பிரித்து இணைக்கப் பட்டது. தமிழ்நாடு முழுவதும் அரசு போக்கு வரத்து கழகத்தில் உள்ள ஊழியர் பற் றாக்குறை இக்கிளையிலும் உள்ள நிலை யில், ஈரோட்டைச் சார்ந்த ஓட்டுநர் செந்தில் குமார் மற்றும் நடத்துனர் வடிவேல் செவ் வாயன்று நள்ளிரவு பணி முடிந்து பணி  மனைக்கு வந்தனர்.  இவர்கள் ஈரோட்டில் இருந்து சேலம், சேலத்தில் இருந்து கோவை, கோவையில் இருந்து சேலம், கோவையிலிருந்து ஈரோடு  ஆகிய வழி தடங்களில் புறநகர்ப் பேருந்தை இயக்கி வந்தனர். பணியை முடித்து வந்தவர்கள் வீடு திரும்புவதற்காக முயன்ற நிலையில், கிளை மேலாளர் தொடர்ந்து ஈரோட்டில் இருந்து சென்னிம லைக்கு பேருந்து இயக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ஆனால் ஓட்டுநர் செந்தில்குமார் மற்றும் நடத்துனர் வடிவேல் ஆகிய இருவரும் தங்கள் உடல்நிலை கருத்தில் கொண்டு கிளை மேலாளரின் உத்தரவிற்குக் கீழ்ப்ப டிய மறுத்தனர். இதனால் கிளை மேலாளர் நடத்துனர் மற்றும் ஓட்டுநரை அவதூறாக திட்டியதாக கூறப்படுகிறது. மேலும், நாளை  முதல் நீங்கள் நகரப் பேருந்திற்குச் செல்ல  வேண்டும் என தெரிவித்துள்ளார். இத னால், மனமுடைந்த இருவரும் கிளை மேலா ளரை கண்டித்து காசிபாளையம் பணிம ணையில் வளாகத்திற்குள் நள்ளிரவில் தர் ணாவில் ஈடுபட்டனர்.