districts

img

அடையாள அட்டைக்கு பணம் வசூல்: சாலையோர வியாபாரிகள் சங்கம் புகார்

திருப்பூர், ஆக. 10 – திருப்பூரில் சாலையோர வியாபாரிக ளுக்கு அடையாள அட்டை வழங்குவதில் பணம் வசூலிக்கப்படுவதாக சிஐடியு சாலை யோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா ளர் பி.பாலன் புகார் கூறியுள்ளார். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்கு மார் கிரியப்பனவரிடம் வியாழனன்று பி. பாலன் நேரில் கோரிக்கை மனு அளித்துக் கூறி யதாவது: திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுக ளிலும் சாலையோர வியாபாரிகளுக்கு அடை யாள அட்டை வழங்குவதற்கு புகைப்படம்  எடுத்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.  ஆனால் சில பகுதிகளில் மாநகராட்சி பெய ரைச் சொல்லி பணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக வாவிபாளையம் பகுதியில் கடந்த  8ஆம் தேதி சிலர் மாநகராட்சி பெயரைச் சொல்லி வியாபாரிகளிடம் ரூ.200 வீதம் வாங் கிச் சென்றுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக அடையாள அட்டை வழங்குவதாக அறி வித்திருக்கும் நிலையில் தற்போது பணம்  வாங்குகிறார்கள் என்ற புகார் அவப்பெயரை  ஏற்படுத்தும். எனவே ஆணையர் தலையிட்டு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பாலன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.