திருப்பூர், ஜூலை 21 - காங்கேயம் வட்டத்தில் புதிதாக மூன்று கல்குவாரிகள் அமைப்பது குறித்து கொடுக் கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு அறிக்கைக்கும், உண்மை நிலவரத்திற்கும் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக கருத்து கேட்கக் கூட்டத்தில் புகார் கூறப்பட்டுள்ளது. காங்கயம் வட்டம் பரஞ்சேர்வழி ஊராட்சி நால்ரோடு கிராமத்தில் இளங்கோ கல்கு வாரி, சிவன்மலை கிராமத்தில் முருகசாமி மற்றும் மருதாச்சலம் ஆகியோரின் இரு கல் குவாரிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் புதனன்று நடந்தது. மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் சரவணக்குமார் முன் னிலை வகித்தார்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசு கையில், கல்குவாரிகள் முறைப்படி நடத்த வேண்டும். ஆனால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில், காணொ லியில் காட்டப்படுவது வேறு வேறாக உள் ளன. கருத்துக்கேட்பு கூட்டங்களை சம்பந்தப் பட்ட உள்ளூரில் நடத்த வேண்டும். ஆங்கிலத் தில் முழுமையாக உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தமிழிலும் வெளியிட வேண்டும். மாவட்ட நிர்வாகத்துக்கும், கல் குவாரிக்கும் இடையே தகவல் தொடர்பாக மட்டுமே இது உள்ளது. ஆனால் தமிழில் வெளியிட்டால் மட்டுமே அனைவருக்கும் கருத்து சென்றடையும். உதவி இயக்குநர் (கனிமம்) அறிக்கையும் தமிழில் வெளியிட வேண்டும். குவாரியை ஒட்டி 300 மீட்டர் தூரத்தில் நல்லிக்கவுண்டன் வலசு கிராம மும், 680 மீட்டர் தூரத்தில் நால்ரோடு கிராம மும் உள்ளன. 300 மீட்டர் தூரத்துக்கு அரு கில் உள்ள குருக்கலாம் வலசு என்ற ஊரே காட்டப்படவில்லை. நால்ரோடு குவாரியில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் குடியிருப்பு கள் எதுவும் இல்லை எனவும்,
இது தொடர் பாக நால்ரோடு கிராமப்புற நிர்வாக அலு வலரின் சான்று, காங்கயம் வட்டாட்சியர், சர்வேயர் உள்ளிட்டோர் கையொப்பத்துடன் 300 மீட்டர் பரப்பளவு உள்ள கிராம வரைப டம், அதே ஆவணத்தின் மற்றொரு பக்கம் வழங்கப்பட்டுள்ளது. இது உண்மையில் தவ றானாது. வீடுகள் இல்லையென பொய்யான தகவல் ஆவணங்களின் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தயவு டன் தான் இவை அனைத்தும் நடக்கின்றன. கல் குவாரிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல் சுற்றி உள்ள கிராமத்தை சேர்ந்த சிலர் வேலை செய்கிறார் கள். இதில் எத்தனை பேருக்கு காப்பீடு செய் யப்பட்டுள்ளது, அவர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்டவை பிடிக்கப்பட்டுள்ளன என்பது போன்ற விவரங்கள் எதுவும் இல்லை. கல்குவாரி நடத்துவதே பெரும் செலவுதான் என்றால், ஊராட்சிக்கு எப்படி நிதியை வழங்க முடியும்? சட்டவிரோதமாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனைக் கொண்டு கல்குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றார்.