districts

பாஜக போல் இறந்தவர்களை திட்டத்தைச் சேர்ந்து முறைகேடு

சேலம், ஜன.23- ஜல் ஜீவன் உள்ளிட்ட பல்வேறு திட் டங்களில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் முறைகேடு செய்த அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வார்டு உறுப்பினர் ஒருவர் சேலம் ஆட்சியர் அலுவலகத் தில் புகாரளித்துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள மானத்தான் கிராம 9 ஆவது வார்டு உறுப்பினர் ராஜமுத்து. இவர்  அப்பகுதி பொதுமக்களுடன் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில், அதிகா ரியை சந்தித்து புகார் மனு அளித்தனர். இதன்பின் ராஜமுத்து செய்தியாளர்களி டம் கூறுகையில், மானத்தான் கிராம  பகுதியில் படிக்கும் மாணவர்களின் பெயர் மற்றும் இறந்தவர்களின் பெயர் ஆகிய வற்றை ஜல் ஜீவன் திட்டத்தில் பயனாளி களாக சேர்த்து சுமார் ஐந்து லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளனர். இதேபோல பிரதம மந்திரி இலவச வீடு  கட்டும் திட்டம், 100 நாள் வேலை திட்டம் என பல்வேறு திட்டங்களில் போலியான பெயர்களை கொடுத்து, இதுவரை ஒன்றை கோடி ரூபாய் முறைகேடு நடை பெற்றுள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்ற கூட்டத்தில் கேட்டபோது, அதிமுக வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ரஞ்சிதம், அவரது கணவர் சிவாஜி ஆகி யோர் மிரட்டி கொலை செய்து விடுவ தாக மிரட்டுகின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும், நடவ டிக்கை எடுக்க மறுக்கின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய  விசாரணை நடத்தி மக்களின் பணத்தை  மீட்டு தர வேண்டும். மேலும், கொலை  மிரட்டல் விடுக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் ரஞ்சிதம் மற்றும் அவரது கண வர் சிவாஜி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.  ஆயுஷ்மான் பாரத் - பிரதன் மந் திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தில் கீழ் சிகிச்சை பெற்று வந்த நோயாளி இறந்த பிறகும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக சிஏஜி அறிக்கை ஒன்றிய அரசின் ஊழல் முறைகேடு களை அம்பலப்படுத்தியது. மேலும், நாடு முழுவதும் பிரதம மந்திரியின் திட் டங்களில் இறந்தவர்களை இணைந்து ஊழல்கள் நடைபெற்று வருகின்றன. அதன்ஒருபகுதியாக தற்போது அதிமுக வைச் சேர்ந்த  மானத்தான் ஊராட்சித் தலைவர் இறந்தவர்களை ஜல் ஜீவன் திட்டத்தில் இணைந்து பண முறைகேட் டில் ஈடுபட்டுள்ளதாக, வார்டு உறுப்பி னர் தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.