தருமபுரி, அக்.31- போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக நல்லம்பள்ளி ஊராட்சி செயலாளர் மீது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நல்லம்பள்ளி வட்டாட்சி யர் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியி ருப்பதாவது, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட எர்ரபையனஅள்ளி ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் கார்த்தி கேயன். இவர் தருமபுரி மாவட்டம், பங்கு நத் தம் அடுத்த பண்ட அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு, 16.5.1998 ஆம் வருடம் முதல் நல்லம்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் செயலாளராக பணிக்கு சேர்ந்து பணிபுரிந்து வருகிறார். அவ ருடைய 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றி தழை உண்மை தன்மை அறியும் பொருட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு தேர்வுகள் துறை உதவி இயக் குநருக்கு அனுப்பியும், அவர்கள் மூலமாக சென்னைக்கு அனுப்பி 10 ஆம் வகுப்பு மதிப் பெண் சான்றிதழை சரிபார்க்கப்பட்டது. அதில் கார்த்திகேயன் 10 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 27 மதிப்பெண்கள் எடுத்து, அதனை திருத்தம் செய்து 47 மதிப்பெண் பெற்றுள்ள தாக பொய்யான சான்றிதழை கொடுத்து பணியில் சேர்ந்து உள்ளதாக தெரியவந்தது. அதன் பேரில் தருமபுரி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதன டிப்படையில் தருமபுரி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தர வின் பெயரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீ சார் கார்த்திகேயன் மீது 4 பிரிவின் கீழ் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.