districts

கல் குவாரிகளுக்கு போலி ரசீது, புத்தகம்: இடைத்தரகராக செயல்பட்டவர் மீது புகார்

திருப்பூர், ஜூன் 15 - திருப்பூர் மாவட்ட கனிமத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சட்ட  விரோதமாக கல்குவாரி உரிமையாளர் கள் சங்க நிதியின் மூலம் பணியாற்றி வந்த புரோக்கர் கோமதி என்ற பெண்  பல ஆண்டுகளாக ஈரோட்டில் கல்குவா ரிகளுக்கு போலி ரசீது, போலி புத்தகம்  அச்சடித்து கொடுத்து அச்சகம் வைத்து  நடத்தி வந்திருப்பது தொடர்பாக உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையத்தைச் சேர்ந்த  இரா.சதீஷ்குமார் என்பவர் இது தொடர் பாக தமிழ்நாடு அரசு தலைமைச் செய லாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை  இயக்குநர் உள்ளிட்டோருக்கு அனுப்பி யிருக்கும் புகார் கடிதத்தில் கூறியி ருப்பதாவது:  திருப்பூர் மாவட்ட கனிமத்துறை  உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஈரோட்டில் இருந்து 10 ஆண்டுகளுக்கு  மேலாக கோமதி என்ற பெண் பணி யாற்றி வந்தார். இந்த அலுவலகத்தில் கல்குவாரி உரிமையாளர்களின் சங்க  நிதியின் மூலம் சட்ட விரோதமாக பணி யாற்றி வந்தது மட்டுமின்றி, உதவி இயக் குநராக இருந்த வள்ளல் போன்ற ஊழல்  அலுவலர்களுக்கும் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார். மேலும் இவ ரது கணவருடன் இணைந்து மிகப் பெரிய அளவில் ஈரோட்டில் தனியாக  அச்சகம் வைத்து பல்வேறு கனிமத் துறை அரசு பணிகளுக்கு ரசீது மற்றும்  பல்வேறு புத்தகம் தயாரித்து கொடுத்து  வந்துள்ளதாக தெரிகிறது. இதில் பெரிய அளவில் கணக்கில் கொண்டு வராமல் போலி ரசீது தயாரித் துக் கொடுத்து மிகப்பெரிய அளவில்  முறைகேடு நடந்துள்ளதாக தெரியவரு கிறது. ஆகவே, இதன் மீது உரிய விசா ரணை கள ஆய்வு செய்து, கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதில் தொடர் புடையவர்களைக் கண்டறிய வேண் டும். இவர்கள் நேரடியாக அரசுக்கு வர வேண்டிய கோடிக்கணக்கான வரு வாயை இழக்கச் செய்துள்ளனர். இது  போன்ற போலி ரசீது, நடை சீட்டு, பர்மிட்  சீட், போலி பில் புத்தகம் போன்ற விசயங் களில் இனி இ பர்மிட் சீட், இணையவழி அனுமதி, ஒருங்கிணைக்கப்பட்ட இணையவழி பதிவு நடைமுறைக்கு அரசு முன்னேற வேண்டும் என்று இரா.சதீஷ்குமார் கூறியுள்ளார்.