districts

img

விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மீது புகார்

அவிநாசி, ஜன.23- அவிநாசி அருகே உப்பிலிபா ளையம் பகுதியை சேர்ந்த விசைத் தறி உரிமையாளர் ஜெயப்பிரகாஷ், உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மீது புகார் தெரிவித்ததையடுத்து தொழிலாளர்கள் மற்றும் உரிமை யாளர்கள் அவிநாசி காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர். கோவை, திருப்பூர் மாவட்டத் தில் சுமார் இரண்டு லட்சம் விசைத்த றிகள் இயங்கி வருகின்றன . இத னால் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை  விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படுகி றது. அதன்படி 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு எட்டு ஆண்டுகளாக கூலி உயர்வு முழுமையாக கிடைக்க வில்லை. விலைவாசி உயர்வால் இத்தொழிலை நடத்த முடியாமல் விசைத்தறியாளர்களும், விசைத் தறி தொழிலாளர்களும் தவித்து வரு கின்றனர். எனவே, கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி உரிமை யாளர்கள் ஜன.9 ஆம் தேதியன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவிநாசி அருகே உப்பிலிபாளையம் பகு தியை சேர்ந்த விசைத்தறி உரிமை யாளர் ஜெயப்பிரகாஷ் விசைத்த றியினை இயக்கியுள்ளார். இதனை யறிந்த விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூலி உயர்வு சம் பந்தமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தாங்கள் ஆதரவு தர வேண்டும் என கூறியுள்ளனர். இத னைத்தொடர்ந்து விசைத்தறி உரி மையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் முத்துச்சாமி, சம்பத் ஆகியோர் மீது ஜெயப்பிரகாஷ் காவல் நிலையத் தில் புகார் அளித்தார். இதுசம்பந்த மாக விசைத்தறி உரிமையாளர் நிர் வாகிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.  இதுகுறித்து தகவலறிந்த விசைத்தறி உரிமையாளர் மற்றும்  தொழிலாளர்கள் காவல் நிலையத் தில் குவிந்தனர். இதையடுத்து காவல் துறையினர் இரு தரப்பினரை யும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.