சேலம், மார்ச் 27- விளைநிலங்களில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரங்களால் ஏற்பட்ட பாதிப் பிற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வலி யுறுத்தி, உயர்மின் கோபுரங்களுக்கு எதி ரான அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் சேலத்தில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், பூலாம்பட்டியிலி ருந்து எடப்பாடி ஆடையூர் துணை மின் நிலையம் வரை செல்லும் 110 கேவி வயர் கள், 126 விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக 31 வானளாவிய கோபுரங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் கேபிள் வழி யாக கொண்டு செல்லுமாறு விவசாயிகள் மற்றும் உயர்மின் கோபுரங்களுக்கு எதி ரான அனைத்து விவசாய சங்கங்களின் கூட் டமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவித்தும், காவல்துறையினரை வைத்து விவசாயி களை மிரட்டி இந்த திட்டம் அமல்படுத்தட் பட்டது. அதுசமயம் விவசாயிகளை திரட்டி கூட்டியக்கத்தினர், போராடியதின் விளை வாக குறைந்தபட்ச இழப்பீடு வழங்கப் பட்டது. ஆனால், இந்த திட்டத்தினால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள விளைநிலங்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நிலத் திற்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வலியு றுத்தி உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான அனைத்து விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பினர் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி ஜெயவேல் தலைமையில் அவ ருடைய தோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான அனைத்து விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பு தாலுகா செயலாளர் ஆர்.ராஜேந்தி ரன், மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா ளர் பெரியண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.