ஜி.சுகுமாறன் பேச்சு திருப்பூர், ஜன.8- மக்கள் நலனை பாதுகாப்பதற்காகவே கம்யூனிஸ்ட்டுகள் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறோம் என மறைந்த தோழர் வி.பி.சுப் பிரமணியம் படதிறப்பு விழாவில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் உரையாற்றி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தோழர் வி.பி.எஸ் கடந்த மாதம் 15 ஆம் தேதி காலமானார். இவரின் படத்திறப்பு விழா வேலம்பாளையத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின், மாநில செயற்குழு உறுப்பி னர் ஜி.சுகுமாறன் பங்கேற்று தோழர் வி.பி.சுப் பிரமணியம் உருவப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். அவர் பேசுகையில், “தோழர் விபிஎஸ், இப்பகுதியில் மக்களுக்கான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு 60 ஆண்டு கள் உழைத்துள்ளார். அதனால் தான் கட்சித் தோழர்கள் மட்டுமல்லாமல், இப்பகுதி மக்க ளும் விரும்பக் கூடியவராக தலைவராக வாழ்ந்துள்ளார். மக்களின் நலன்களைப் பாது காப்பதற்காக கம்யூனிஸ்டுகள் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறோம். இன்று நாட் டில் நடக்கும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக தோழர் விபிஎஸ் போன்றவர்கள் மக்களை ஒற்றுமைப் படுத்துவதற்காக போராடினர், போராடுகின்றனர். தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் நவீன வடிவங்கள் வந்துவிட்டன. இந்நிலையில் தொழிலாளர் களை திரட்டுவது சாதாரண வேலையல்ல. சாதிய, மதவாத அரசியலை முன்னிருத்தி பாஜக மக்களைப் பிரிக்கிறது. ராமர் கோவிலை அரசியல் மையப் படுத்தி தேர்த லில் வெற்றி பெற பாஜக முயற்சிக்கிறது.
அதே ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு ஜனா திபதி திரவுபதி முர்முக்கு அழைப்பு கொடுக்க வில்லை. அவர் இந்து இல்லையா? என்கிற கேள்வி எழுப்புகிறோம். அரசியலுக்காக ராமரை பாஜக பயன்ப டுத்துவதை உணர்ந்தவர்கள் மார்க்சிஸ்ட்டு கள். ஆகவே, ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க விடுத்த அழைப்பை ஏற்க மறுத்த ஒரே அரசியல் இயக்கம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தான். பாஜக - வின் இத்தகைய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, தோழர் விபிஎஸ் தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடினார். அவரது வழியில், மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்திட நாமும் ஒன்றுபடுவோம். போராடுவோம் “ என் றார். இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் வேலம்பாளை யம் நகரக் குழு உறுப்பினர் த.நாகராஜன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர்கள் தோழர்கள் சி.சுப்பிரமணியம், எம்.வெள்ளிங் கிரி, வி.ஆர்.சரவணகுமார், வி.அழகு ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரச் செயலா ளர் ச.நந்தகோபால், பஞ்சாலை மாவட்டத் தலைவர் கே.பழனிச்சாமி, கல்யாண சுந்த ரம் (சிபிஐ), தம்பி வெங்கடாசலம் (கொம தேக), மோகன் ராஜ் (காந்திய மக்கள் இயக் கம்) ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த் தினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சாவித்திரி, நகரக் குழு உறுப்பி னர்கள் பி.நவபாலன், அ.ஆறுமுகம், பி.சின் னச்சாமி, அ.உமாநாத், ர.கவிதா, ஆர்.சு குமார், வி.லட்சுமி, பி.ரகுபதி உள்ளிட்ட கிளைச் செயலாளர்கள், தொழிற்சங்கத்தி னர், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்ட னர். முடிவில், கிளைச் செயலாளர் சி.வசந்தி நன்றி கூறினார்.