திருப்பூர், அக். 31 - தமிழ் மொழி உரிமைக்காக சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து தொடர்ந்து போராடி வருபவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் கூறினார். திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத் தில் திங்களன்று தமிழ்நாடு அமைப்பு தின சிறப்புப் பேரவைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பி னர் ஜி.சுகுமாறன் பேசுகையில், தமிழ்நாடு அமைப்பு தினம் நவம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனினும் நாம் இன்று (அக்.31) இந்த தினத்தைப் பற்றி பேரவை நடத்துகிறோம். இன்றைய நாளுக் கும் மிக முக்கிய வரலாறு உண்டு. ஏனென் றால் இன்றுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான நாள். 1964ஆம் ஆண்டு அக் டோபர் 31இல் மார்க்சிஸ்ட் கட்சி உதயமா னது. மொழி வழி மாநிலம் அமைந்ததில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு முக்கியப் பங்கு உள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்திலேயே மொழி வழி மாநிலம் அமைய வேண்டும் என குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டு கள். நாடாளுமன்றத்தில் சென்னை மாகா ணத்திற்கு, தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை கொடுத்தவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலை வர் பி.ராமமூர்த்தி. நாடாளுமன்றத்தில் அந்த தீர்மானம் விவாதத்திற்கு வந்தபோது பி. ராமமூர்த்தி சிறையில் இருந்தார். எனவே அவருக்குப் பதிலாக கம்யூனிஸ்ட் இயக் கத்தின் மற்றொரு தலைவர் பூபேஷ்குப்தா அந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். திமுக தலைவர் அண்ணாதுரை அதை வழி மொழிந்தார்.
தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த, காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த சங்கரலிங் கனார், தனது சடலத்தை கம்யூனிஸ்டுகளி டம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியி ருந்தார். கம்யூனிஸ்டுகள் மொழி உரிமைக் காக பாடுபட்டவர்கள் என்பதற்கான சான் றாக இது திகழ்கிறது.
அதேபோல் திராவிட இயக்கத்தினர் “இங்கிலீஸ் எவர், இந்தி நெவர்” (எப்போதும் ஆங்கிலம், இந்திக்கு இடமில்லை) என்று சொன்னபோது, “வேரிஸ் தமிழ்?” (எங்கே தமிழ்?) என்று கேள்வி கேட்டவர்கள் கம்யூ னிஸ்ட் தலைவர்கள் பி.ராமமூர்த்தியும், ஜீவானந்தமும்தான். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப் பேற்று அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது, தமிழ் ஆட்சி மொழியாக வும், நிர்வாகத்திற்கான அலுவல் மொழியா கவும், கல்வி மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் இருக்க வேண்டும் என்று பி. ராமமூர்த்தி வலியுறுத்தினார். அண்ணா துரை அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் இன்று வரை நீதிமன்ற மொழியாக தமிழ் ஆக்கப்படவில்லை. நீதிமன்ற மொழியாக வும் தமிழ் மொழி வருவதற்கு தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகள் போராடி வருகிறோம். இன்றைய ஒன்றிய பாஜக அரசு ஒற்றை ஆட்சியாக ஒற்றை மொழித் திணிப்பை செய்ய முயற்சித்து வருகிறது. இந்த சூழ்நி லையில் அட்டவணையில் உள்ள 22 மொழிக ளையும் சம அங்கீகாரத்துடன், அலுவல் மொழியாக ஆக்க வேண்டும் என்று கம்யூ னிஸ்ட் கட்சி போராடி வருகிறது. இவ்வாறு ஜி.சுகுமாறன் கூறினார். முன்னதாக இக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் திருப்பூர் மாவட்டத்தில் கட்சிப் பணிகள் குறித்து விளக்கிப் பேசினார். இதில் மாவட்ட, இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.